டென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் "உயிர்வரை இனித்தாய்" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இளையோரினை ஈர்க்கும் ராப் பாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். டேரியஸ் அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல புதிய எல்லைகளைத் தாண்டித் தொடரவும் மயிலிட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அண்மையில் ஜேர்மனியில் இயங்கும் "Tamil Artist Area" எனும் இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் மற்றும் பாடல்களையும் காணலாம். "உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!2/3/2014 ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! எங்கள் மயிலிட்டி மண்ணில் பிறந்த மகளின் மகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். நர்வினி டேரி இரவிசங்கர் அவர்கள் பிரான்ரின் "ஒளிக்கீற்று" அமைப்பினால் சிறந்த ஈழத்து இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே! அவர் நடித்த விரைவில் வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படத்தின் தொடர் ட்ரெயிலர்களை இணைக்கின்றோம் பார்த்து மகிழ்ந்து உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் நமது மண்ணின் மங்கைக்கு வழங்குங்கள்! ஒளிக்கீற்று திரையிசை பாடல் நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலை படைப்பாற்றலுக்கு அமைக்கப்பட்ட களம். பிரான்ஸ் பாரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் போட்டியிட்ட நம்மவர்களின் படைப்புக்களில் நமது மயிலிட்டி மகள் நர்வினிடேரி இரவிசங்கர் (மயிலிட்டி பரஞ்சோதி வசீகரனின் பேத்தி) அவர்கள் ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதினை தமதாக்கிக் கொண்டார். இவரது வெற்றியால் மயிலிட்டி பெருமையடைகின்றது, வாழ்த்துக்கள்! மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூஷணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நேற்று கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இலக்கியம் கலைத்துறையில் நீண்ட கால சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. |
முகவுரைமயிலிட்டியின் சாதனையாளர்கள் பதிவுகள்
October 2017
முழுப்பதிவுகள் |