“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”
“திருமந்திரம்” நூலின் காப்புச் செய்யுளாகிய மேல் உள்ள பாடலின் கருத்து ஐந்து திருக்கரங்கள், பிரணவத்தின் வடிவாக யானை முகம், வெண்ணிலாவின் மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற ஒற்றைக்கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாக இருப்பவனைச் சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகிறேன். (திருமந்திரத்தில் சிவனுக்கு நந்தி என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
என்னுள் இருந்து என்னை இயக்கும் பரம்பொருளின் அம்சமான ஞானமுதல்வனாகிய கணபதியை வணங்கிச் சரஸ்வதிதேவியின் அருளையும் வேண்டி இம்முயற்சியை ஆரம்பிக்கின்றேன்.