(நாகேந்திரம் கருணாநிதி)
3. பாசம் (மலம், தளை)
ஆணவ மலம்
உயிர்களுக்கு அறியாமையைச் செய்யும், யராலும் படைக்கப்படாத ஒரு பொருள் ஆணவ மலம் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. இவ்வுண்மையை
இருபா இருபஹது பாடல் எண் 4 (25) இல்
“ . . . . . . . . .எம்மைவந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு” எனக் கூறுகிறது.
உண்மை விளக்கம் பாடல் எண் 22 இல்
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள்.”