(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 11. கொடிக்கவி
கொடிக்கவி. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். ஒருநாள் உமாபதி சிவாச்சாரியார் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாகத் தனக்கு அமைந்த விருதுகளோடு சிவிகை மேல்ச் சென்றார். அப்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞானசம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைப் பார்த்து “பட்ட கட்டையில் பகலற் குருடு ஏகுதல் பாரீர் “ என்றார் இதன் பொருளை (பட்ட கட்டை – சிவிகை, பகற் குருடு – பகலிலும் விருது ஆகிய விளக்கைச் சிவிகைக்கு முன்னால் பிடித்துச் சென்றமை) உணர்ந்த உமாபதி சிவம் சிவிகையில் இருந்து இறங்கித் தன்னிலும் பார்க்க மிகவும் இளவயதுடைய மறைஞானசம்பந்தரின் திருவடிகளைத் தொழுதார்.