(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் -
2. திருக்களிற்றுப் படியார்
சைவ சித்தாந்த சாத்திரத்தில் இரண்டாவது நூல் திருக்களிற்றுப் படியார். இந்நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்டது. இவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயநாரின் மாணவராவார். இந்நூல் திருவுந்தியாருக்கு விளக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் திருவுந்தியார் எழுதப்பட்டு 50 ஆண்டுகளின் பின் எழுதப்பட்டது. இன் நூலின் அரங்கேற்றத்தின் போது நூலைத் தில்லை நடராசப்பெருமானின் பொன்னம்பலத்தின் முன்னிருக்கும் பஞ்சாச்சரப் படிக்கட்டில் (ஐந்துபடிகள்) வைத்தனர். அப்போது படிகளின் இருபுறமும் கல்லால் வடிக்கப்பெற்றிருந்த யானைகளில் ஒன்று உயிர்பெற்று நூலேடுகளை எடுத்து நடராசப்பெருமானின் திருவடிகளில் வைத்தது. இதனால் இந்நூலுக்குத் திருக்களிற்றுப் படியார் எனப் பெயரிடப்பட்டது. திருவுந்தியாரையும் திருக்களிற்றுப் படியாரையும் இரட்டைச் சாத்திரங்கள் எனக் கூறுவதுண்டு. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.