(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 4. சிவஞான சித்தியார்
சிவஞான சித்தியார் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் விரிவானதும், சிவஞான போதத்திற்கு அடுத்துப் போற்றப் பெறுவதும் சிவஞான சித்தியார் ஆகும். இந்நூல் சிவஞான போதத்திற்கு உரை நூல் (வழி நூல்) ஆகும். இந்நூல் முதற் பாகம் பரபக்கம் எனவும் இரண்டாவது பாகம் சுபக்கம் எனவும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பரபக்கம் 301 பாடல்களைக் கொண்டது. இப்பகுதியில் இந்தியச் சமயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் பொருந்தாத கொள்கைகளை எடுத்துரைத்துச் சைவசித்தாந்தக் கொள்கையை நிலை நாட்டுகிறது. சுபக்கம் 328 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி சிவஞான போதத்தின் பன்னிரண்டு சூத்திரத்திற்கு விரிவுரையாக அமைந்துள்ளது. இந்நூல் பிற சாத்திரநூல்களில் இல்லாத அளவை இலக்கணத்தை வரையறுத்துக் காட்டுவதுடன் தீட்சை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்நூலின் சுபக்கப் பகுதியில்ச் சில பாடல்களைப் பார்ப்போம்