(நாகேந்திரம் கருணாநிதி)
திருவைந்தெழுத்து
இறைவன் தன்னை அடைவதற்கு ஆன்மாவுக்கு அருளிய திருமந்திரமே நமசிவாய என்னும் அருள் மந்திரம். திருவைந்தெழுத்தில் வரும் “சிவாயநம” சூட்சும பஞ்சாச்சரம். இது இருளை நீக்கி ஞானத்தைக் கொடுக்கும். “நமசிவாய” தூல பஞ்சாச்சரம். இது உலகியல் இன்பத்தைக் கொடுக்கும். திருவைந்தெழுத்தில் வரும் எழுத்துக்களின் உட்பொருள் சி – இறைவன், வா – சக்தி (அருள்), ய – ஆன்மா (உயிர்), ந – திரோதம் (வாழும் விருப்புத் தரும் மறைப்புச் சத்தி), ம – மலம் (மும்மலங்கள்).