(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பிள்ளையார் பெருங்கதை சைவசமய மக்களால் கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சஸ்டித் திதிவரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுஸ்டிக்கப்படும் விரதமாகும். இது விநாயக சஸ்டி விரதம், பிள்ளையார்கதை விரதம் எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களில் முக்கியமாக பிள்ளையார் ஆலயங்களில் இந்த இருபத்தொருநாட்களும் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை படிக்கப்படும் வழக்கம் பலகாலமாக பேணப்பட்டு வருகின்றது.