புத்தகங்களைப் பற்றி நான் கூறுவதை விட இப்புத்தங்களை வாசித்து அதற்கு ஆசியுரை, அணிந்துரைகளைத் தந்த எனது குரு மதிப்பிற்குரிய திரு பற்றிமாகரன், மதிப்புக்குரிய சிவாச்சாரியார்களான மகேஸ்வரக் குருக்கள், வசந்தன் குருக்கள், கமலநாதக் குருக்கள் ஆகியோருடன் சிவயோகம்இந்து கலாச்சார மையம், சைவமுன்னேற்றச் சங்கம் ஆகிய அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் கூறியுள்ளவற்றுடன் எனது உரையையும் புத்தகங்களின் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ளலாம். இப் புத்தகங்களை வாசித்துப் பயன் பெற விரும்புபவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை சித்திரைவருடப்பிறப்பன்று அருள் மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் (128, AURELIA ROAD, CROYDON, CR0 3BF) காலை 9.00 மணி, மதியம் 12.00 மணி, மாலை 7.30 மணிப் பூசைகளைத் தொடர்ந்து இலவசமாக இப்புத்தகங்களை பெற்றுச் செல்லலாம்.
நன்றி