இலங்கையில் எதிர்வரும் 08/01/2015ல் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு வேட்டுக்களே மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை எவ்வாறு தம் வலையில் சிக்க வைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த கட்சிகளுக்கு தீனியாக அமைந்ததுதான் "உயர்பாதுகாப்பு வலயங்கள்" வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயம் எனும்போது காங்கேசன்துறை, மயிலிட்டி, மற்றும் பலாலி போன்ற பெரும் பிரதேசங்களின் இணைப்பே வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களாகும். இம்முறை தேர்தலில் நமது நிலங்களே பாடுபொருளாகவும், கருப்பொருளாகவும் அமையப்பெற்றுள்ளது. இவ்வாறு வாக்குவங்கியில் அடகுவைக்கப்பட்ட நமது நிலங்கள் மீளப்பெறப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லை வழமை போன்றே ஏலத்தில் விடப்படுமா?.................
எங்கள் பரம்பரை நிலங்கள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே!!
எங்கள் பரம்பரை நிலங்கள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே!!
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.