ஸ்தபதி செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் மறைந்தார்.
*****************************
தன் வாழ்நாளில் கலை, இலக்கியம், ஆன்மீகம் என்ற தளத்திலே பயணித்த கலைஞர் இவர்.
சிறந்த சிற்பக்கலைஞனாக ஆலயங்களுக்குரிய சித்திரத்தேர்கள், வாகனங்கள், சப்பரங்கள், மஞ்சங்கள் இவற்றைக் கடந்து சமூகம் சார், விடுதலை சார்ந்த சிற்பங்கள், ஓவியங்கள் என்பவற்றை தன் கைவண்ணத்தில் உருவாக்கியபெருமைக்குரியவர்.
நாடகத்துறையிலும் சிறுவயது தொட்டு நாட்டம் கொண்ட மையால் காத்தவராயன் சிந்து நடைக்கூத்தினை இயக்கும் அண்ணாவியார் என்ற அந்தஸ்தினையும் அடைந்தார்.
இலக்கியப் பரப்பிலே சிறந்த முறையில் தமிழ் இலக்கண, இலக்கியத்தை கற்றதனால் மரபுக்கவித் துறையில் பெயர் சொல்லும் கவிஞனாக எழுதி வந்தார்.
நினைவுமலர் ஆக்கத்துறையில் சதம் கண்ட சண்முகநாதன் என்ற புகழாரத்தைப் பெற்றார்.
ஐயப்பனை நினைந்து நோன்பிருந்து, சபரிமலை சென்று பதினெட்டுப் படியேறி மகரஜோதி பார்த்து வருவார்.
குரு சுவாமி என்ற உயர்நிலை பெற்று சீடர்கள் பலருக்கு மாலையணிவித்து மலைக்கு அழைத்துச் செல்லும் பேறு பெற்றார்.
இந்த மாபெரும் கலைஞனின் இழப்பு மயிலிட்டி மண்ணுக்கு மட்டுமன்றி கலையுலகிற்கே பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!



























