மூன்றாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.