இது அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான (RDA) வீதியாக உள்ளதுடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டு ஒருவருடமாகிறது. இதுவரை இந்த வீதி புனரமைக்கப்படவில்லை. இந்த வீதியின் நிலை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் அதிகாரிகள் திருத்துவோம் திருத்வோம் என கருத்து தெரிவிக்கின்றனரே தவிர வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
மேலும் கட்டுவன் மயிலிட்டி வீதி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து வறுத்தலைவிளான் கட்டுவன் சந்தி, கட்டுவன் சந்தி - மல்லாகம் -சங்கானை வீதி , தையிட்டி ஆகிய வீதிகளை விரைந்து புனரமைத்து யாழ்.மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் கவனம் எடுக்குமாறு அங்கு மீள்குடியேறிய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தி: செ. நிருஜன்