
1990 களில் வலிந்து துரத்தியடிக்கப்பட்ட எம் மக்களின் ஏக்கம் இடப்பெயர்வின் வலி அகதிகளாக்கப்பட்டோரின் அவமானங்கள் நம் முன்னோர்களின் வாழ்நாள் கனவு எதிர்கால சந்ததியினரின் எழுச்சி என இவை அனைத்தின் ஊற்றாக அனைத்துலக திருப்பூர் ஒன்றிய மக்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமுக நிலையத்துடனான கல்வி நிலைய கட்டடம் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.
- திருப்பூர் ஒன்றிய கல்வி நிலையம்
- திருப்பூர் ஒன்றிய சனசமூக நிலையம்
- திருப்பூர் ஒன்றிய கணினிக்கூடம்
- திருப்பூர் ஒன்றிய கலையரங்கம்
- திருப்பூர் ஒன்றிய விளையாட்டுக் கழகம்
- திருப்பூர் ஒன்றிய முன்பள்ளி
என ஊருக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் மயிலிட்டி மக்களுக்காக உதயமாகின்றது.
காலம்: 12.05.2025
நேரம்: 9.15 -10.30 வரை
இடம்: சனசமூக நிலைய வீதி, திருப்பூர் ஒன்றியம்,மயிலிட்டி.
“அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கல்வி “
காலை 8.00 மணிக்கு அருள்மிகு திருப்பூர் ஒன்றிய பேச்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று, 8.45 மணியளவில் படங்கள் வெளிவீதிக்கு எடுத்துவரப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க ஊர்மக்கள் மாணவச் செல்வங்கள் இணைந்து திருப்பூர் வீதியூடாக பிரதான வீதியை வந்தடைந்து பிரதான வீதியூடாக எமது கல்வி நிலையத்தை வந்தடைந்து விருந்தினர்களை அழைத்துக்கொண்டு சென்று நிகழ்வுகள் இனிதே 9.15 மணியளவில் ஆரம்பமாகும்.
வடமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எமது ஊரின் இந்த அறிவுக்களஞ்சியத்தை மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மண்ணிலே திறந்து வைக்க எமது மண்ணின் மைந்தர்கள் அனைவரையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
“ஒன்றித்து உயர்வோம்”
நிர்வாகம்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.