
வளம்மிகு மயிலிட்டி மண்ணின் பெருமைமிகு தோன்றல் அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள். பலருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். உயர்ந்த திடகாத்திரமான தேகமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மரியாதையான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்.