கொடுமையின் வேகமா உன்முகத்தில்
கொத்தரிவாள் ஏன் உன்கையில்
நம் நாட்டில் பிறந்த பெண்களின் பிரதிபலிப்பா நீ
கொத்தரிவாள் ஏன் உன்கையில்
நம் நாட்டில் பிறந்த பெண்களின் பிரதிபலிப்பா நீ
கொடுமை கொடுமை என ஓடும் பெண்கள்
ஓய்வதுதான் எப்போது இறைவா?
பாசமாக சாதம் பரிமாறும் சந்தனக் கையை
என்றுதான் அரிவாளின்றிப் பார்ப்பது............
ஒளிவட்ட முகம் கோபமின்றி
ஒளிநிலவாக வலம் வருவது எப்போது?
கவலை வேண்டாம் பெண்ணே
பசுமை மலரும் ஒருநாள் நிச்சயம்!
ச. சாந்தன்