பசும்பால் போல் வெள்ளை மனதுடன் வருவது உறவுகள்!
உயர்விலும் ஒளிபோன்று கூட இருப்பது உறவுகள்!
தாழ்விலும் உரிமையுடன் கூட இருப்பது உறவுகள்!
பிறப்பிலும் இறப்பிலும் உரிமையுடன் வருவது உறவுகள்!
பசும்பால் போல் வெள்ளை மனதுடன் வருவது உறவுகள்! உயர்விலும் ஒளிபோன்று கூட இருப்பது உறவுகள்! தாழ்விலும் உரிமையுடன் கூட இருப்பது உறவுகள்!
0 Comments
மயிலைக்கடல் அன்னையே கொஞ்சம் நில்லு
எம்மவர் சோகம்தனை கொஞ்சம் கேள்! உன் மடியில் தவழ்ந்தவர்கள் நாம் உந்தன் தாலாட்டில் வளர்ந்தவர்கள் உந்தன் ஈரக்காற்றினில் நனைந்தவர்கள் உந்தன் தென்றலில் பாட்டு இசைத்தவர்கள் கொலம்பஸ் சுற்றாத உலகு வேண்டும்
நீல் ஆம்ஸ்ரோங் கால் வைக்காத நிலவு வேண்டும் காந்தி பேசாத அகிம்சை வேண்டும் சங்கிலியனிடம் இல்லாத வீரம் வேண்டும் மயிலிறகை இரசித்த நான்
மயிலை ஊரில் பிறந்தேன்! மண்ணை நேசிக்கும் நான் மகுடம் சூட்டிய ஊரில் பிறந்தேன்! காலைக் கதிரவன் ஒளிவீச
குயில் கூட்டங்களின் இசைமழையும் பசுங்கிளிகளின் சங்கீதமும் சிட்டுக்குருவிகளின் மெட்டுக்களும் சோகங்களைச் சிதறடித்து இன்பங்களைத் தேனாகத்தரும் சொர்க்கபூமியாம் மயிலைமண்!
கவிக்கு மறைவில்லை
புத்திசாலி பிரமனே .............. அழகாய் படைத்தாய் பெண்ணை இல்லை ....இல்லை ........இல்லை ...... என் காதலியை (யே ) என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில் விந்தணுவில் தொடங்கி கருவாக அடையும் வரை போராட்டம்!
சிசுவாகிப் பூமித்தாயிடம் வந்தடையப் போராட்டம்! மழலையாகி மழலை மொழிபேச, தவள, நடக்கப் போராட்டம்! சந்தோசத்தையும் இன்பங்களையும் அளவோடு அனுபவித்துக்கொள்!
துன்பங்களையும் துயரங்களையும் அடியோடு மறந்துவிடு! தாகங்களையும் ஏக்கங்களையும் முடிந்த்தவரை தணித்துவிடு! காமங்களையும் களவுகளையும் மனதிலிருந்து களைந்துவிடு! நிஜ நிழல் தெரியா அழகுக் கவிதை அவள்!
அந்த அழகுக் கவிதையைத் தேடும் கவிஞன் நான்! அவளின் வில்போன்ற அழகிய இரு விழிகளின் ஒளி என் கவிதைக்கு ஒளி அழகு! கருவறையில் மலர்களை மலர்விக்கின்றவளே
வாடா மலராக மலருவது எப்போது? பூஜையறையில் பூஜிக்கவேண்டிய நீ பூஜைக்கே ஏற்காத எருக்கலம்பூவாக இருப்பது ஏன்? |
மயிலை ச. சாந்தன்ச. சதானந்தன் பதிவுகள்
January 2019
முழுப்பதிவுகள் |