நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

"நினைவுகள் 1"

அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல் கூடினோம் ஒன்றாக, பல நிகழ்வுகள் பல மாற்றங்கள். 

விடுமுறை காலத்தில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு விளையாட்டு வீடு கட்ட ஆசை வந்தது. பல வாடிகளிலிருந்து உருவப்பட்ட கம்புகளினாலும் கிடுகுகளினாலும் எங்களின் சிறிய வீடு அல்லது கொட்டில் அல்லது குடில் உருவாகியது. சுவாமிப்படங்கள் உள்ளே வந்தன, பூக்கள் வைத்து விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றுடன் அழகான வீடு அமைந்தது. 

கொட்டில் கட்டியாச்சு பெற்றோர் பெரியோர் தடைசொல்லவில்லை. எங்களைப் பார்த்து « பெடியள் பரவாயில்லை » என்றவர்களும், « நடக்கட்டும் நடக்கட்டும் » என்றவர்களும், « டேய் என்னடா செய்யிறீங்கள் » என்று அதட்டியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அடுத்தகட்டம் சமையலுக்கு நகர்ந்தது.

அவரவர் வீடுகளில்போய் நாங்கள் பெடியங்கள் கொட்டிலில் சமைக்கப்போகிறோம் என்றால் « ஓமோம் நல்ல முயற்சி, என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ எல்லாம் தாறம் » என்று சொல்வார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் வீடுகளிலிருந்து ஒவ்வொரு பொருள் கொண்டுவரவேண்டுமென்று முடிவாயிற்று (களவு அல்ல பொருள் சேர்த்தல் என்று வைத்துக் கொள்வோம்). சமையல் சோறு கறி என்று முடிவெடுக்கவில்லை. சுகமான சமையல் எங்களின் முதல் அடுப்படி முயற்சி «ஏரல் புளியாணம்». உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், புளி, பெரிய சட்டி, அகப்பை, கோப்பைகள் என தேவயான அனைத்தும் ஒவ்வொருவரினதும் வீடுகளிலிருந்து வந்தது. பெற்றோருக்குத் தெரியாமல்.

« ஏரல் » கடற்கரையில் கால்களாலோ அல்லது கைகளாலோ ஈரமண்ணில் தோண்டி எடுத்துக்கொள்ளலாம். அப்படியே நாங்களும் எங்களுக்குத் தேவயான அளவுக்கு எடுத்துக் கடலிலேயே கழுவிக்கொண்டு வந்து எங்கள் குறூப்பின் தலைவர், பூசகர், சமையல்காரர் என எல்லாமுமாகிய உதயத்திடம் கொடுப்போம். சிலர் புளியைக் கரைக்க, மற்றும் சிலர் வெங்காயம், மிளகாய் வெட்ட, மற்றவர்கள் அடுப்புக்குத் தேவயான மூன்று கல்லிலிருந்து ஓலை, விறகு வரை எல்லாம் தயார் பண்ணிக்குடுக்க, உதயத்தின் கைவண்ணத்தில் ஏரல் புளியாணம் இனிதே உருவாகும். (செய்முறை சொல்லமாட்டோம் அது பரமரகசியம்).

பின்பு எல்லோரும் சட்டியைச்சுற்றி ஒன்றாயிருந்து கோப்பைகள், சிரட்டைகள் என்பனவற்றில் விட்டு ஏரலைச் சாப்பிட்டு, புளியாணத்தைக் குடிப்போம். என்ன ஒரு சுவை. இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் ஊறுகிறது. அந்தத்தூள், இந்தத்தூள் என ஒன்றுமில்லை, வாசனைக்கென்று ஒன்றும் சேர்ப்பதுமில்லை. சேர்த்துக்கொண்டது புளி, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மட்டுமே. எந்த ஒரு சாப்பாட்டுக் கடையிலும் கிடைக்காது.

அந்த நேரத்தில் நினைத்திருப்போமா எங்களுக்குச் சமைத்துத் தந்த உதயம் பிரான்ஸ் நாட்டில் மெக்சிக்கன் உணவுவிடுதியில் குசினியராக வேலை செய்வானென்று !

(அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல், கூடினோம் ஒன்றாக பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.)

இன்னொரு நினைவுகளில் சந்திப்போம், !



கு. அருண்குமார்
பதிவு: 26/08/2012 


    "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Soumettre
You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Submitted Information:உங்கள் பெயர்:
Anton Gnanapragasam

உங்கள் மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
பழைய நினைவுகளை நினைவூட்டியதற்கு முதலில் அருண்குமாரிற்கு வாழ்த்துக்கள்.இதில் கதாநாயகன் உதயன் பற்றி என்னும் பல கூறலாம்.அவர் சின்ன வயதினிலே தனிக்குடித்த வாழ்கை வாழ்ந்தவர்.வயது ‌அதிகமாக இருந்தவர்கள்தான் அவரின் நண்பர்கள்.

பதிவு: 25/11/2012

You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Submitted Information:
உங்கள் பெயர்: vincent alvit 

உங்கள் மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
இளமைக்கால நினைவுகள் என்றுமே சுகமானவை!! தொடருங்கள் பதிவுகளை.

பதிவு: 29/09/2012

You've just received a new submission to your "நினைவுகள்" 

Submitted Information:
உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி   

உங்கள் மின்னஞ்சல்:
@  
அருண்குமார் அவர்கள் படைத்த நினைவுகள், நான் பிறந்த மண்ணே எம்மை ஒரு கணம் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்று நாம் பிறந்த மண்ணிற்கு அழைத்துச் சென்றது!

பதிவு: 08/09/2012  

You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Submitted Information:உங்கள் பெயர்:
Justin Thevathasan

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
நினைவுகள் ஒன்று என்ற கட்டுரையின் மூலம் என்னை இருபத்திஐந்து வருடங்கள் பின்னோக்கி பார்க்க வைத்து மலரும் நினைவுகள் ஆக்கியதர்க்கும் , நானும் அந்த வாழ்கையை வாழ்ந்தவன் என்ற முறையிலும் உங்களுக்கு என் நன்றயை தெரிவித்துக்கொள்கிறேன் . இது போன்ற கட்டுரைகளாலும், கவிதைகளாலும் என்னை போன்ற புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற எம்மவர்களுக்கு இது போன்ற கட்டுரைகள் ஊரின் நினைவுடன் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கின்றன ஆகவே உங்கள் படைப்புக்கள் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க மயிலிட்டி வளர உங்கள் எழுத்து.  

பதிவு: 28/08/2012
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com