நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

"நினைவுகள் 2"

மடம்

எங்களால் என்றுமே மறக்க முடியாத இடம்.  அதனைச் சுற்றித்தானே அனைவரும் திரிந்தோம்.  இளையோர் பெரியோர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொண்ட அதன் குணம். சிறிய இடம் தான் என்றாலும் அதனைச் சுற்றித்தானே அனைத்தும் நகர்ந்தது.

ஒன்றுகூடல் என்பது அங்குதானே எங்களுக்கு ஆரம்பமாயிற்று. வருடத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்றில்லாமல் எந்நாளும், எந்நேரமும், எப்போதும் யார் யார் என்னவேலை செய்தாலும் தொலைபேசியோ, குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ, ஏன் முகநூல் என எதுவுமில்லாமல் தினந்தோறும் முற்பகலிலேயே தவறாமல் அழகாகக் கூடிடுவார்கள் ஆடவர்கள் அனைவரும்! வீட்டில் பெண்களுக்குச் சமையலுக்கு இடையூறு செய்யாமல்!

எவர் தொடங்குவது எப்படித் தொடங்குவது என்ற விதிமுறை எதுவும் இல்லை தானாகவே ஆரம்பமாகும் ஆனால் பொருள் நீர், நிலம், காற்று என்ற மூன்றையும் விட்டுப் பிரியாமலே தொடர்ந்திருக்கும் தொழில் செய்த கடலைப் பற்றியும் வானிலை பற்றியும் ஆராய்ந்துவிட்டு தரையில் தங்கள் வீட்டிலிருந்து ஆரம்பமாகிப் பக்கத்துவீடு, ஒழுங்கை, ஊர், பக்கத்து ஊர், நகரம், தலைநகரம், வெளிநாடு என்று போய்க்கொண்டிருக்கும்….

அண்மித்த வீடுகளிலிருந்து சமையல்வாசனை அனைவருக்கும் பொதுவான குறுஞ்செய்தியாய் வந்து வீட்டுக்குப் போங்கள் சாப்பாட்டுநேரம் என்று உஷார்ப்படுத்தும். சில வீடுகளின் ரேடியோக்களும் அடிக்கடி நேரம் என்னவென்று சொல்லிக்கொண்டிருக்கும். "சிறிய இடைவேளைக்குப் பிறகு" என்பதுபோல் இவர்கள் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாலும், ஏற்கனவே விருந்து முடித்தவர்கள் "இடைவேளை வேண்டாம்" நாங்கள் தொடர்ந்து நடாத்துகின்றோம் என்பதுபோல் பொறுப்பாக இடத்தை எடுத்துக்கொள்வார்கள்!

வாசகசாலையில் தினசரிகளைப் படித்தாலும் மடத்திலிருந்து அதைப்பற்றி அலசி ஆராயும் மயிலை மைந்தர்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தார்கள்.

பிற்பகல் என்ன ஒரு ஆச்சர்யம், உரையாடலோடு விளையாட்டுக்களும் ஒன்றிவிடும். சீட்டாட்டம் ஒரு பக்கம், தாயம் ஒரு பக்கம் என பெரியவர்கள் தமது திறமையை பறைசாற்ற… சிறியவர்கள் கடற்கரையில் ஒரு பகுதியாகவும், ஒழுங்கைகளில் ஒரு பகுதியாகவும், கோவிலடியில் ஒரு பகுதியாகவும் சடுகுடு, உப்புப் பந்து, கிளிக்கோடு, கிட்டிப்புள்ளு, றவுண்ட் றேஸ், அவா, கெந்தல், கொக்கான், சோழி விளையாட்டு, கள்ளன் பொலிஸ், ஐஸ்கோல் இன்னும் எழுதாத விளையாட்டுக்களில் ஏதாவதொன்றை விளையாடிக்கொள்வார்கள்.

எத்தனை மடங்கள் அத்தனையும் அதே இடத்தில்தானா? அல்லது இல்லையா? மீண்டும் காண்போமா? மடங்களே மறைந்துவிடாதீர்கள்! வருவோம் ஒருநாள் உங்கள் மடியில் விளையாட!

(ஒன்றுகூடல் என்பது அங்குதானே எங்களுக்கு ஆரம்பமாயிற்று. வருடத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்றில்லாமல் எந்நாளும், எந்நேரமும், எப்போதும் யார் யார் என்னவேலை செய்தாலும் தொலைபேசியோ, குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ, ஏன் முகநூல் என எதுவுமில்லாமல் தினந்தோறும் முற்பகலிலேயே தவறாமல் அழகாகக் கூடிடுவார்கள்.) 

இன்னொரு நினைவுகளில் சந்திப்போம்!

கு. அருண்குமார்
பதிவு: 09/09/2012 


    "நினைவுகள் 2" (மடம்) கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Soumettre
You've just received a new submission to your 
"நினைவுகள் 2" "மடம்" அருண்குமார்.

Submitted Information:உங்கள் பெயர்:
sangeetha thenkili

உங்கள் மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
மிக அற்புதமான படைப்பு... நகைச்சுவை கலந்த கட்டுரை நடையும் தெரிந்தெடுத்து பாவிக்கப்பட்ட சொற்களும் ஒரு திறமையான எழுத்தாளனுக்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டிருக்கிறது..வெற்றுப்புகழ்ச்சி அல்ல..உண்மையான புகழ்ச்சி... அத்துடன் மயிலிட்டி பற்றிய எமது நினைவுகளையும் தட்டிச் செல்கிறது... தொடர்க உங்கள் பணி...

பதிவு: 11/09/2012 


நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com