நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

மயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்! - இரா. மயூதரன்

14/1/2019

0 Comments

 
Picture
Picture
​மயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்!

​மயிலிட்டியில் குறித்த ஒரு பகுதியானது, காவற்கடவை என்ற புராதன பெயர் கொண்டு விளங்கியது. காலப்போக்கில் அது மருவி காட்டுக்கடவை என்றானது. அதுவே மயிலை மண்ணில் தலையெடுத்த குறிச்சி வேறுபாட்டின் பழிச்சொல்லாக மாறியது.

காட்டுக்கடவையார் என்று அழைக்கப்பட்ட பொழுதுகளில் எமது முன்னோர்களது உணர்வுகள் கொந்தளித்து, இரத்தம் சூடேறுமளவிற்கு அன்றைய நிலை காணப்பட்டது.

இந்நிலையில்தான் பாணாந்துறையில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த, இன்று (12/01/19) அமரராகியுள்ள ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் இன்றளவிலும் துணி வர்த்தகத்தில் செழித்தோங்கி வரும் திருப்பூர் நகரத்தின் பெயரை காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவைக்கு சூட்டுவதென முடிவு செய்தார்.

1950 களின் பிற்பகுதியில் பாணாந்துறையில் இருந்து, மயிலிட்டி காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவை பகுதியில் வசித்துவந்த சின்னையா கணபதிப்பிள்ளை(SK) என்பவரின் பெயருக்கு திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்து அஞ்சல் அட்டை அனுப்பியிருந்தார். அந்நேரம் கடமையில் இருந்த தபால் ஊழியர்களது ஒத்துழைப்புடன் காலப்போக்கில் திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்த கடிதங்கள் எம்மவர்களை நாடி வரத்தொடங்கியது.
அன்றிலிருந்தே காட்டுக்கடவை என்ற பெயர் திருப்பூர் என்று மாற்றமடைந்தது.

காலப்போக்கில் இனவிருத்தி காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டபோது திருப்பூர் ஒழுங்கையில் பூர்வீகமாக குடியிருந்த எமது முன்னோர்கள் அயல் பகுதிகளில் உள்ள காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறத் தொடங்கினர்.

இவ்வாறு பரவிய குடிப்பரம்பலானது,
  • வேல் வீதி
  • விநாயகர் வீதி
  • அம்பாள் வீதி
  • கொட்டுப்பள்ளம் வீதி / சிவன் வீதி
  • குகன் வீதி
  • ஈஸ்வரி வீதி
  • தாழையடி வீதி
  • தெனியம்மன் வீதி

என மேற்கு திசை நோக்கியதாக சில கிலோ மீட்டர் நீளமான பகுதிகளை தன்னகத்தே உள்வாங்கி விரிவாக்கம் கண்டது.

இவற்றை உள்ளடக்கிய பகுதியே திருப்பூர் ஒன்றியம் என்றானது. இன்றைய மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியம் உருவான வரலாறு இதுதான். திருப்பூர் என்ற பெயரின் காரணகர்த்தா ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களே.

மயிலிட்டி, திருப்பூரின் நாயகனாக என்றென்றும் திகழும் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் மற்றும் மயிலிட்டி, திருப்பூர் ஒன்றிய உறவுகளின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாரின் ஆத்மா சிவபதமெய்ய எல்லாம் வல்ல ஆதிசிவனை வேண்டுகின்றேன்.

குறிப்பு : எமது மூத்தவர்களிடம் கேட்டறிந்த விடயங்களாக நினைவுத்தளத்தில் இருந்து தொகுத்த இவ்வரலாற்று
பதிவில்  தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.
​
இரா.மயூதரன்
குகன் வீதி,
திருப்பூர் ஒன்றியம்,
மயிலிட்டி.

இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture
    Picture

    Archives

    January 2019

    Categories

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com