நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"ஏக்கம்"

  •          அதிகாலையில் ஆதவன் கிழக்குத் திசையில் வலம் வரத்தொடங்க 
  • மயிலை கேணியிலுள்ள மரங்களிலிருந்து குயில்கள் இசை மீட்ட 
  • குருவிகள் ஆரவாரத்துடன் சிறகடித்துப் பறக்க 
  • அடுப்படியிலிருந்து அம்மாவின் பணிவாக அதட்டும் குரல் கேட்க 
  • சோம்பலுடன் படுக்கையிலிருந்து எழும்பி குளித்து விட்டுவர, 
  • அம்மா காய்ச்சி வைத்திருக்கும் பாலைக் குடித்துவிட்டு 
  • பாசத்துடன் பரிமாறும் உணவினை சாப்பிடுகையில் 
  • எனக்கு ஒரு புத்துணர்வு ஏற்படும்.    
  •                        
  • காலை உணவினை முடித்துவிட்டு பாடசாலை சீருடை அணிந்து புறப்படுகையில் அம்மா தோட்டத்திற்குள் களை புடுங்கச் செல்லுவார். அப்பா துவிச்சக்கரவண்டியினை எடுத்துக் கொண்டு தோட்டத்திலிருந்து எடுத்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லுவார். அவர்கள் படும் கஸ்ரங்கள் எல்லாம் அன்று எனக்கு வேதனையினை தந்ததில்லை.
  •  
  • நான் விளையாட்டுப்பிள்ளையாக பாடசாலை செல்லும் போது சோமர் காணியிலுள்ள தென்னைகளில் ஓடிவிளையாடும் அணில்களையும் அக்காணியிளுள்ள பாழடைந்த கிணற்றினுள் வாழும் பாம்புகளுக்கு கல்லெறியும் மாணவர்களையும் பார்த்து ரசித்துக் கொண்டு செல்வேன்.
  • கொஞ்ச தூரம் நடந்து செல்கையில் அனிஞ்சில் மரத்தில் ஏறி பழம் புடுங்கும் நண்பர்களுடன்சேர்ந்து பழம் புடுங்கி பீனாறி மரங்களுக்கிடையால் செல்கையில் கள்ளிச்செடியில் நம்ம ஊரவர்கள் கட்டித் தொங்கவிட்ட ஆட்டு பொக்கிள்கொடி பார்சல்களும் தென்படும். இதையெல்லாம் கடந்து செல்கையில் மயிலை மண்ணின் வளங்களில் ஒன்றான பனைக்கூடல்களும் அதனுள் பனம்பழம் பனங்கொட்டை தேடுபவர்களும் அதையும்விட பனங்கள்ளை ருசிக்க கள்ளுக்கொட்டிலை சுற்றி இருக்கும் வயோதிபர்களையும் தம் உழைப்பிற்காக உயிரையும் பொருட்படுத்தாது பனையேறி பனங்கள்ளு கொண்டுவருபவர்களையும் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருக்கும்.    

  •   
  • நண்பர் கூட்டத்துடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு செல்கையில் எமது பாடசாலையையும் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட பழையகால கட்டடங்களையும் பெரிய வேம்பையும் அதனை சுற்றி விளையாடும் மாணவர்களையும் பார்க்க எமக்கு இன்னும் உற்சாகம் தலையேறும். அதற்கிடையில் பாடசாலை மணியொலிக்க ஒவ்வொருவரும் வெறுப்புடன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு அவரவர் வகுப்பறைகுச் செல்வோம். இரண்டாவது மணியொலிக்க அமைதியுடன் எழும்பி நிற்க மூன்றாவது மணியொலிக்க தேவரம் பாடி அன்றைய பாடசாலை தொடங்கும். 


      பாடசாலைப் பொழுதினை முடித்துக்கொண்டு திரும்புகையில் எல்லோர் மனதிலும் கலகலப்புத் தெரியும். ஆனாலும் அந்தக் கலகலப்பு வீட்டுவாசலுடன் தொலைந்துவிடும். வெள்ளை உடுப்பு மண்ணிறமாக மாறியிருப்பதை கண்டவுடன் அம்மா கத்தத் தொடங்குவா. ஆனாலும் அது இரண்டு நிமிடமே நீடிக்கும். பாசத்துடன் தரும் தேநீரும் புண்ணாக்கும் கப்பல் வாழைப்பழமும் எனக்குப் புத்துணர்ச்சி தரும்.

மாலையில் அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் கடற்கரைக்குச் செல்கையில் மருதடி விநாயகரை கும்பிட்டுவிட்டு ராணியக்கா கடைக்கருகில் உள்ள ஒழுங்கையால் சென்று கடற்கரையை அடைய கருவாட்டு சிற்பம் கட்டுபவர்களும் அதனை லொறியில் ஏற்றுபவர்களும் அங்குமிங்குமாகத் திரிவார்கள். அதனைத் தாண்டிச் சென்று சடுகுடுவும் கள்ளன் பொலிசும் விளையாடும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடுவேன்.


நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே ஆதவன் அஸ்தமிக்கத் தொடங்குவான். காகங்கள் கரைந்து கொண்டு இருப்பிடம் தேடிச்செல்ல சோத்துப்பெட்டியுடன் அலைகளுடன் போட்டியிட்டு மீன்பிடிக்கச் செல்லுவார்கள் பெரியோர்கள். அவர்களை வீட்டுவாசல்களிலும் கடற்கரையோரத்திலும் நின்று சங்ககால மங்கையர்கள் போல பெண்கள் வழியனுப்பி வைப்பார்கள்.


       விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் உன்னை திருத்தவே முடியாது என்று அம்மா மீண்டும் கத்தத் தொடங்குவார். நான் அதனை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டவன் போல் கை, கால், முகம் கழுவி இறைவனை வணங்கி படித்துக் கொண்டு இருக்கையில் அம்மா இரவு சாப்பாடு செய்யும் வாசனை என்னை பலமாக புரட்டி எடுக்கும். அம்மா வாங்க சாப்பிட என்று கூப்பிடும் பாசமான குரல் கேட்டவுடன் முதலாவதாக எனது கோப்பையுடன் நிற்பேன். அங்கும் எனக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் கடைப்பெடியன் என்று எல்லோரும் பாசத்துடன் விட்டுக் கொடுப்பார்கள். சாப்பிட்டவுடன் அம்மா தலையினைக் கோதி நித்திரையாக்க நானும் ஏதும் கனலையின்றி நித்திரை செய்வேன்.

இவ்வாறு வளர்ந்த எனக்கு அல்லது எங்களுக்கு 15.06.1990 அன்று மாலை  நான்கு மணியளவில் பெரியதோர் இடிவிழுந்தது. உயிரினை பாதுகாப்பதற்காக அன்றே உடுத்திய உடையுடன் மாற்றுடையின்றி எங்கு போவதென்று தெரியாமல் மக்களோடு மக்களாக மருதனாமடத்தை வந்தடைந்தோம். அன்றே எம்முடன் பழகிய தெரிந்த முகங்கள் பலர் கோரச் சாவினை அடைந்தார்கள் என்று அறிந்ததும் மனம் வெந்தது. அன்றிலிருந்து எனக்கு ஒவ்வொன்றும் ஏக்கமாக இருந்தது.

மருதனாமடத்தில் இருந்த எனக்கு எனது படிப்பினைத் தொடர்வேனா எனது ஊர் மக்களுடன்சேர்ந்து நமது ஊரில் மயிலிட்டியில் வாழ்வேனா என்ற ஏக்கமே பெரிய கேள்வியாக இருந்தது. அங்கிருந்து நானும் எனது குடும்ம்பத்தினரும் பல மைல் தொலைவில் உள்ள மாமுனை என்ற கிராமத்திற்குச் சென்று குடியேறினோம். அவ்வூர் மக்களின் அரவணைப்பும் எனது குடும்பத்தாரின் பாசமும் எனது ஏக்கத்திற்கு ஒரு மருந்தாக அமைந்தது. 

அங்கு உள்ள பாடசாலை ஒன்றில் "இடம்பெயர்ந்த" மாணவன் என்ற குறியீட்டுப் பெயருடனே கல்வியினைப் பயின்று கல்வி பொது சாதாரண பரீட்சையில் சித்தியெய்தினேன். தொடர்ந்து அவ்வூரில் படிக்க முடியாததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வடமாராட்சி சென்று அங்கு எனது உயர்கல்வியினைப் பயின்று அதிலும் சித்தியெய்தினேன்.


பட்டாம்பூச்சிபோல் சிறகடித்துப் பறந்து சந்தோசத்துடன் இருக்கும்போது, எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவத்தினால் எனது உயிரினைக் காப்பாற்றுவதற்காக கொழும்பு சென்றேன். அங்கிருந்து வெளிநாடு செல்வதற்காக பல முயற்சிகள் செய்து ஏமாற்றங்களும், பல சிறை வாழ்க்கையினையும் சந்தித்து 1999ம் ஆண்டள்வில் நாகரீகத்திற்குப் பெயர்போன நாடான பிரான்சுக்கு வந்தடைந்தேன்.

இவ்வாறு ஏமாற்றத்தையே வாழ்க்கையாகக் கொண்ட நான் குடும்பத்தாரின் அரவணைப்பாலும் பாசத்தாலும் ஓர் வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். இருந்தும் என்றுதான் எனது ஊருக்குச் சென்று எனது மண்ணை அரவணைத்து ஊர் மக்களுடன் சேர்ந்து வாழ்வேனோ? என்ற ஏக்கத்துடனேயே எனது பொழுதுகள் கழிகின்றது!!!!!!

ச.சாந்தன்

    "ஏக்கம்" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com