"தாயே என்றும் எனக்கு நீயே!"
தாயே!
என்று நான் வருவேன் உன் மடி தவழ... அன்று கழிந்துதான் இறப்பேன் உன் மடியில் புதைய..... என்றுதான் வருவேனோ? உன் முனையில் பால் பருக.... அன்றுதான் தொலையும் என் துக்கம்! அதன் பின்புதான் என்னைத் தழுவும் தூக்கம்! தாய் மண்ணே! தூக்கம் தொலைந்து 21 முடிந்து 22 வருடமாகியும் ஏக்கம் நிறைந்து நெஞ்சு பாழாய்ப் போச்சு! தாயே! தமிழ் அன்னையே.... ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே உயிர் பாதி போச்சு! என்ன பாவம் நாம் செய்தோம்? உன்னைப்பிரிந்து தவிக்க.... என்ன பிழை நீ செய்தாய்? எம்மைத் தொலைத்துத் துடிக்க.... என்னைப் போல் பல பேர்க்கு உன்னைச் சேரத் துடிப்பு ஊர் போகும் கனவோடு தான்என் நாட்களின் நகர்வு.....! ஜீவா உதயம் |
You've just received a new submission to your "தாயே என்றும் எனக்கு நீயே - ஜீவா".
Submitted Information:பெயர்: shanthan sadacharalingam மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: வாழ்த்துக்கள் ஜீவா உதயம்! உங்களுடைய "தாயே என்றும் எனக்கு நீயே" எனும் கவிதை மிகச் சிறப்பாக இருந்தது.இக்கவிதைக்கு நீங்கள் பாவித்த சொற்பதங்கள் மிகவும் அழகு. உங்களுடைய எண்ணங்களை மட்டுமன்றி எல்லலோருடைய ஏக்கங்களையும் கூறிய உங்கள் கவிதை போன்று இன்னும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்! |