"தேடல்"
எதுவுமே புரிந்தும் ....... எதுவுமே புரியாமலும் ..... காலத்தின் சூழ்ச்சியின் ;, கோலத்தின் மிரட்சியில், கடிதான மனங்களும் இனிதான மனங்களும் , நிறம் மாறும் குணங்களும் , நேர் முறை எண்ணங்களும் , புரிதல் இல்லாப் பிணைப்புக்களும் , புரிதல் கொண்ட பிணைப்புக்களும் , பற்றாத அன்பும் , வற்றாத அன்பும் , படைப்பியலின் தத்துவங்கள் ...! வாழ்வியலின் விதி முறைகள் ....! எதற்காக எதற்காக, புரிதல் இல்லாப் படைப்புக்கள்???????? ஆயிரமாயிரம் வினாக்குறிகளுடன் ? முற்றுப்புள்ளியில்லாத தொடர் தேடல்கள்...... ஆயினும் ஆயினும் சோர்வின்றிய பயணம் ....... தொடரட்டும் தொடரட்டும் வெற்றிப் பாதை நேக்கி ...................! உதயன் ஜீவா . பதிவு: 13/03/2013 |
|