காணிக்கை மாதாவின் மணியோசை கேட்குது. கடலோர கிராமம் கண் விழித்து கொள்ளுது . ஆழ்கடல் போனோனின் அலையோசை வருகுது . அத்தான் என்று அன்புள்ளம் அழைக்குது. காங்கேசன் சாலை அகலத் திறக்குது . கன காலம் கழித்து தன் உறவை அழைக்குது . காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
முனையன் வளவானின் சிற்பத்தேர் அசையுது. முக்கனி படைத்து பூசை நடக்குது . எட்டு திக்கும் இசை இசைக்குது . எங்கள் ஊரில் வசந்தம் பிறக்குது . காது அடைக்கும் சத்தம் வருகுது . இரண்டு தசாப்த புதினம் பறையுது . காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
இரவல் கோடியில் இருந்து உன்னை நினைத்தோம் . நாறிய மீன் உண்ட போது அழுதோம் . தவறணையில் குடித்த போது தலை விதியை நொந்தோம். வாழை இலைக்கு ஜந்து ரூபா துடித்தது நெஞ்சு . கத்திப் பிடிக்கும் காசு ? காணாத இடமெல்லாம் கண்டு விட்டோம் . கூடாத கூட்டெல்லாம் கூடி விட்டோம் . காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .