நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"கோரத்தாண்டவம்"

கோரத் தாண்டவத்தில் கொலையுண்டவருக்கு ஆண்டெட்டில் அஞ்சலிகள் .....      மயிலைக்கவி 


உச்சி வானில் நின்று நச்சு குண்டு போட்டான்,

வஞ்சித்து விட்டாய் என்று நீதி கேட்டோம் ஐநாவில்.

கடல் நடுவில் வைத்து கழுத்தறுத்தான் குமுதினியில்,

வெகுண்டெழுந்து நின்றோம் வீரர்களாய்.

தாயே !

சிங்களவன் கொண்டிருந்தால்

சீற்றம் கொண்டு அடித்திருப்போம்,

பெற்றவள் செய்த குற்றத்தை போயெங்கு முறையிடுவோம்?

வளர்த்தவள் வஞ்சித்தால் வழக்காட மன்று உண்டா?

அள்ளி அள்ளி தந்தவளே! அள்ளிக்கொண்டு

ஏன் சென்றாய்?

அலையோசை கேட்க, அதிகாலை

வந்தவர்கள் செய்த பாவமென்ன?

மதிய வெயிலுக்கு முன் உன் மடி தவழ

வந்தவர்கள் சிதறுண்ட மாயமென்ன?

கட்டுமரமேறியவன் கரை திரும்பவில்லை,

கரை வலை வீசியவன் உயிருடன் இல்லை,

திருப்பலி கொடுக்க திருச்சபை வந்தவன்,

கடல்ப் பலியானான் கரிய நீரிலே.

பாலனின் பிறப்பை கொண்டாடும் வேளையில்,

பாடையில் ஏற்றிய பாவியே! 

வாழ்வளித்த நீயே! எம் வாழ்வழித்தாயே! 

உயிரைக் கொன்று பிழைக்கிறோம் என்றா,

எங்கள் உயிர்களை தின்றாய்?

வெள்ளை மணலையும், நீலக் கடலையும்,

பாவாக்கிய பாவலன், பனை வடலிக்குள் பிணமாக.

ஏலேலோ....ஏலேலோ....என்று உன்னை பாடியவள் 

இலையானுக்கு இரையானாள்.

பெத்தவள் போச்சியில் கொடுத்த பாலையே! 

குடிக்க மறுத்த பாலகனுக்கு,

உப்பு நீரை ஊட்டி ஊதி வெடிக்க வைத்தாயே!

பட்டம் விட்ட பள்ளிச் சிறுவன் 

செத்துக் கிடந்தான் முள்வேலியில்.

எல்லாம் முடிஞ்சு ஆண்டெட்டும் ஆகி விட்டது.

நினைவுகள் மட்டும் கண்ணீர் துளிகளாக,

உறவுகளே! உங்கள் சாவும் சரித்திரமாகிவிட்டது.

கடலம்மா!

மீண்டும் உன்னடியே சரணமம்மா,

இனி சஞ்சலங்கள் வேண்டாமடி,

தண்டனைகள் போதும்....

எங்கள் சந்ததிகள் வாழ 

அள்ளித் தந்திடுவாய் செல்வம்.

-மயிலைக்கவி 

    "கோரத்தாண்டவம்" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்!

அனுப்புக:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com