நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
Photo
சுனாமி நினைவுகளில்ஆண்டு ஒன்பது


அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை 
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட 
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும் 
ஆறவில்லை எம்மனசு 

உன்னை அண்டிவாழ்ந்தோரை 
வளமுடனே வாழவைத்தாய் 
வாழ்வளிக்கும் ஆண்டவனாக உன்னை 
வாயார புகழ்ந்து கொண்டோம் 
பொங்கியெழுந்து எம்வெள்ளை மணலையும் 
கரிமணளாக்கியது ஏன் ?

மாலையில் மேலெழும் மதி பெண்ணவளுக்கு 
ஓரக்கண்கொண்டு  பார்த்து வழிவிட்டு மறையும் 
சூரியனை காணவருவோர்க்கு 
கண்கொள்ளா காட்சியினை அளித்த கடல் அன்னையே 
வெறிகொண்டு ஆடியது ஏன் ?

சிறுமீனும் ,பெருமீனும் உன்மடியில் 
பிடித்து வாழ்ந்த மாந்தர்களை 
வாழ்ந்தது போதும் வா....என்னிடம் என்று  
கடலடியில் அமுக்கி சென்றதேன் ?

அன்னையின் அரவணைப்பில் சிரித்து விளையாடியது போல் 
நீ தாலாட்டும் கடல் அலையுடன் விளையாடிய 
மழலைகளை வயிறுபொருமவைத்து கொன்றதேன் ?

புகுந்தவீட்டு அன்னைபோல் உன்னை அரவணைத்த 
எம் அன்னையரை காவுகொண்டதேன் ?

பெற்ற அன்னைபோல் உன்மடியில் வளர்ந்த எம் 
தந்தையர்களை தரணியில்ய இல்லாமல்லாக்கியதேன் ?

கொந்தளிக்கும் கடல் அலையிலும் 
குமரிப்பெண்களிடம் குசும்புகாட்டுவதுபோல் 
துள்ளித்திரிந்த நம் விடலைபருவங்களை 
மண்ணோடுமண்ணாக்கியதேன் ?

கடல்யன்னையின் கதைகள் பலகூறிய 
எம் பாட்டன் ,பாட்டிகளை 
பரிதாபமாக சாவடித்ததேன் ?

கடலம்மா ......
பொங்கியெழுந்தது போதும்அம்மா
சாவடித்தவர்களை சாந்தியடையசெய்யம்மா 
உன் சந்ததிகள் வாழ வழிசெய்யம்மா 
போதுமே போதுமே உந்தன் கணக்கு .

      நன்றி 
மயிலை ச .சாந்தன்  
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....

ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**

வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!


ஆழிப்பேரலையே ஆடினாயே கோரத்தாண்டவம் 
அடங்காத்தமிழனை அழித்துச்சென்றாயே
ஆண்டதமிழினம் மாண்டுபோனதே
உவகையோடுவாழ்ந்தவரை
உறக்கத்தில் அழித்தாயே.
தாயின்மடியே தஞ்சமெனவாழ்ந்தவரை
தண்ணீரில் மூழ்கடித்தாயே.
நீ அள்ளிச்சென்றவர்களுக்கு
நாம் கொள்ளி கூட வைக்கலையே...
கொத்துக்கொத்தாக விதைத்தோமே..

உப்பிட்டகடல்தாயே அவர்கள்
உயிரையும் எடுத்தாயே.
உன்மடிவாழ்ந்தவர்வாழ்வில்
உலைவைத்தாயே..
பூத்துக்குலுங்கிய பூக்களை
கசக்கி எறிந்தாயே
உன்னதவாழ்வை நோக்கியவர் வாழ்வை
உதிர வைத்தாயே

கூற்றுவனே ! 
உனக்கேன் எம்மீது இந்தகொலைவெறி.
கொத்துக்கொத்தாய் எம்மவரை பறித்தாயே.
எங்கள் சிங்காரதேசத்தை சிதைத்தாயே.
எமை தாலாட்டிய கடலன்னையே
ஏன்பொங்கியெழுந்தாய்?
யாரிட்டார் ஆணை
அழித்துவிட்டாய் எம் வாழ்வை.
ஆறவில்லை எம் நெஞ்சங்கள்
அடங்கவில்லை துயரம்
ஆண்டதமிழனை அடக்கநினைத்தாயே.
மாண்டுபோனவரை மீளத்தருவாயோ.???
நீ எம்மவர் உயிரை குடித்தநாள்
எம்வாழ்வில் அது கறுப்புநாள்.

ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!
ஆண்டுகள் ஒன்பது ஆனபோதும்
ஆறாது எம்நெஞ்சில் சோகம்.
ஊழித்தாண்டவமாடிய ஆழிப்பேரலையே
புனல்கொண்டு எமை அழித்தாலும்
புதுஜென்மம் நாமெடுப்போம்.
ஆழிவாய்திறந்து பேரலை அடித்தாலும்
நாம் அடங்கிவிடமாட்டோம்.
அழிந்துவிட்ட தேசமதில்
புனரநிர்மானம் செய்தோமே.
மீண்டும் எம்மை சூழ்ந்ததே கார்மேகம்.
பலசுனாமிகள் சேர்ந்து எமைதாக்கியதே.
நந்திக்கடலும்,முள்ளிவாய்க்காலும்
எங்கள் குருச்ஷேத்திரமானதே.
அங்கேதானே விதைத்தோம் எங்கள் விதைகளை.
காலனே உனக்கும் காலம் வராதோ?
எங்கள் காவலர்களை காவுகொண்டாயே.
கடலம்மா கண்திறந்து பாராயோ?
தாய்மண்ணின் தடைகளை
உடைக்காயோ.
மயிலைமண்ணை சூழ்ந்த மாற்றானை
அழிக்கப்புறப்படு.
பொங்கியெழு கடலம்மா
அழிப்பேரலையாய் ஆர்ப்பரித்து எழு
அன்னியனை அழித்துவிடு

எங்கள்மண் ணை அன்னியன் ஆக்கிவிட்டான் காண்டவப்பிரஸ்தம் .
அதில் அமைத்திடுவோமபுது் இந்திரப்பிரஸ்தம்.
எம்மண் குருச்ஷேத்திரமமுடிந்த அஸ்தினாபுரம்
அதில்கட்டி எழுப்புவோம் புது நகரம்
எங்கள் மயிலிட்டியில் அமைத்திடுவோம்
புதிய துவாரகை.....

மயிலை சுதா நவம்
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com