நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
 மீண்டும் வாழ வழி செய்வோம்

                ஒரு நிலம் என்பது வெறும் மண்ணும் மரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் சூழ்ந்தது அல்ல. அந்த நிலத்தோடு பாரம்பரியங்களும் பண்பாடும் வாழ்கிறது. ஆத்மார்த்தமான ஆழமான உரிமை அங்கு பிறப்பெடுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. மற்றைய எல்லாத் தனிமனித உரிமைகளையும் போலவே தனது சொந்த நிலத்தில் வாழும் உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. எமது சுயதொழில்களைச் செய்து எமது சொந்தக் காலில் நிற்பதற்கு எமதுசொந்த மண்ணே வழிசெய்கிறது. 


                ஒரே கிராமத்தில் வருடாவருடம் பிறந்து வளர்ந்து நாமெல்லாம் ஆளாகியிருக்கின்றோம். அந்த மண்ணின் ஞாபங்களை எழுதுகிறோம். பாடுகிறோம். நினைவுபடுத்துகிறோம். மனதால் அழுகிறோம். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு எம் மண்ணை நினைத்துக் கொள்வது மட்டுமே எம் மண்ணுக்கு நாம் செய்யும் கடைமை ஆகாது. இவற்றுடன் மட்டுமே நின்றுவிடக் கூடாது. இவை மட்டுமே எமது மண்ணில் எம்மை வாழ வைக்காது. 


                 எமது கிராமத்தில் நாம் வாழவேண்டும். அதை புனர்நிர்மானம் செய்ய வேண்டும். எமது பரம்பரையினர் வாழ்ந்த, எமது சொந்தக் காணிகளையும் வீடுகளையும் கொண்ட, எமது சொந்தத் தொழில்களைச் செய்யக் கூடிய, நாம் உரிமையோடு கம்பீரமாக நடந்து செல்லக் கூடிய எமது கிராமம் இன்னமும் மனிதர்கள் இல்லாது காடு மண்டியே கிடக்கிறது. எமது ஊரின் தற்போதைய நிழற்படங்களை பார்க்கும் எல்லோருக்கும் கண்ணில் கண்ணீரோடு கொஞ்சம் கடைமை உணர்ச்சியும் சுரக்க வேண்டும்.


             ;நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்றோம். இனி எங்கே ஊருக்கு போகப் போகிறோம். இந்த நாடுகளில் எல்லா வசதியும் இருக்குத் தானே.. எங்கட பிள்ளையள் இங்க பிறந்தவை தானே.. அவையள் ஊரில வாழ மாட்டினம்; என்ற ஊகங்களின்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாது எமது ஊரில் எம் சொந்தங்களை வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
நாளை இந்த புலம்பெயர்ந்த தேசங்கள் எம்மை விரட்டினாலோ அல்லது எமக்கே இங்கு இருப்பதற்கு மனம்மறுத்தாலோ நாம் சென்று தங்குவதற்கு எமக்கு நிழல் தருவதற்கு உரிமையோடு உலவுவதற்கு எமது மண்ணே தேவைப்படும்.`

              1990 இல் எமது கிராமத்தில் இருந்த மக்கள் தொகையை விட நான்கு மடங்கு மக்கள் தொகையை தற்போது நாம் கொண்டுள்ளோம். தாயகத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மட்டும் இருக்கும் எம் சொந்தங்களின் கோரிக்கைகளாலும் மனுக்களாலும் மட்டுமே எமது கிராமத்தில் நாம் வாழ்வதற்கான அனுக்கூலத்தை ஏற்படுத்த இயாலாது. புலம்பெயர்ந்து வாழ்வோரும் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

             கிராமம் சம்பந்தமான ஒவ்வொரு கூட்டங்களின் போதும் இவ்விடயம் பற்றி கலந்தாலோசித்து யோசனைகளை உள்வாங்கி செயற்படுத்த வேண்டும். பெரும் ஒன்றுகூடல்களின் போதும் இவ்விடயம் சம்பந்தமான அனைவரினது யோசனைகளை உள்வாங்கி அதை செயற்படுத்த முனைய வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார் என்று
கேட்டுக்கொண்டிராது, அனைவரும் சேர்ந்து செயலாற்றுவது பலனளிக்கும்.
                        
                                      - சொந்த ஊர் கொண்டிருக்கும் எந்தையின் வேதனை-

அருண்குமாருக்காக கானகி
கானகியிடமிருந்து அருண்குமார்

பதிவு:12/09/2012

    "மீண்டும் வாழ வழி செய்வோம்"  கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Soumettre

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com