என் அம்மா...❤️...
எப்போதும் என் மனதில் அழகிய ஓவியமாய் என்அம்மா. காலையில் எழுகையில் யேசுவே அந்தோனியாரே என்னும் நாமத்துடனே குளித்து செவ்வரத்தை, நித்தியகல்யாணியையும் சுவரில் தொங்கும் அனைத்துப்படங்களுக்கும் வைத்தபின் அவசரமாய் ஓடிச்சென்று காலைத்தேனீருடன் எழும்பு பிள்ளை என்றுஅன்புடன் அழைக்கும் அன்பான முகம்.
எப்போதும் என் மனதில் அழகிய ஓவியமாய் என்அம்மா. காலையில் எழுகையில் யேசுவே அந்தோனியாரே என்னும் நாமத்துடனே குளித்து செவ்வரத்தை, நித்தியகல்யாணியையும் சுவரில் தொங்கும் அனைத்துப்படங்களுக்கும் வைத்தபின் அவசரமாய் ஓடிச்சென்று காலைத்தேனீருடன் எழும்பு பிள்ளை என்றுஅன்புடன் அழைக்கும் அன்பான முகம்.
அந்தந்த நேரத்துக்கு எல்லா வேலைகளையும் சோர்வின்றி செய்து முடிக்கும் திறன். பிள்ளை அதை செய் இதைசெய் என்று கட்டளை இட்டு செய்விக்க சொல்லத்தெரியாத ஜீவனோ என்று எனக்கு தோன்றியது உண்டு. ஏன் வலி நோ களைப்பு என்று சொல்லி என்றும் நான் அறிந்திலேன். மெனத்தில் தவித்துக்கொண்டு இருந்தது என் உள்ளத்தில் ஒர் உணர்வு. ஏனெனில் அப்பா இறந்த அன்று இரண்டே வயது நிரம்பாத என்னையும் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகளையும் கையனைப்பில் அனைத்தபடி அனாதைபோல் எப்படி வலி சுமந்தாள் என்று. அம்மாவின் கடைசி அழுகை அதுவாகத்தான் இருக்க வேண்டும் யேசுவே என்று மன்றாடும் வயதுகூட அப்போ எனக்கல்லை.
அப்பா இல்லாததை நான் இன்றுவரை அறிந்ததில்லை. அதை அம்மாவின் அன்பே சரிசெய்தது. அம்மாவின் அன்பு ஆறு பேருக்கும் திகட்டாமல் கிடைத்த போதும், அவரின் கோபம் கண்டிப்பு கருணை என்றும் குறையவே இல்லை. எத்தனை பிடிவாதம், வாக்குவாதம், சண்டை நாம் செய்தாலும் அன்பாலே அதை சரி செய்திடுவார். அதற்கும் நாம் அடங்காத வேளையில். சுள்ளித்தடியால் அடித்து பின் அதற்கு எண்ணை பூசி கவலைப்படும் பரிவு. அதற்கும் போணை என்றும், தொடவேண்டாம் என்னை அடித்துவிட்டாய் தானே? என்று சொண்டு பிதுக்கி விம்மி அழும்போதும். தலை தடவும் அம்மாவிடம் அகப்பட்டு அடிவாங்கி தோற்றுப்போவதில் எவ்வளவு மகிழ்ச்சி. ஆறு பெண்பிள்ளை பெற்றாலும்
கடைசி என்னில்தான் பிரியம் அதிகம். அதை சொல்வதில் எனக்கு பெருமிதம்.
அம்மா எனக்குத்தான் என்று சொல்வதில் எனக்குப் பெருமிதம். அதற்கு அவர் நீங்கள் கலியாணம் செய்தால் எங்களை மறந்திடுவியள் என்றபோது, நான் அம்மாவைத்தான் கலியாணம் செய்வேன். உன்னை விட்டு போக மாட்டேன் என்று அறியாத வயதில் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு சொன்னதில் அம்மாவுக்கு என்ன பெருமையோ அள்ளி அனைத்துக்கொண்டாள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இறைவன் அவதாரம் அம்மாதான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதும்கூட என் உடுப்பு தோய்த்தது கூட இல்லை அவாவே எல்லாம் செய்வார். அந்த வயதில் கூட அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்குவேன். இறுக்கி கட்டி பிடிக்காதே பிள்ளை என்று சொல்வாரே தவிர தள்ளிப்படு என்று எப்பவுமே சொன்னதில்லை. அம்மாவின் பாசமான வாசனை அது ஒரு தனி சுகம் சொல்லும். கோவிலுக்கு கைபிடித்து கூட்டிப்போகும்போது அன்புடன் பல விசயங்கள் சொன்னபடி கூட்டிப்போவார்.
அம்மாவின் கைப்பக்குவம் என்னவொரு ருசி ஆனால் பலதடவை தனக்கு பசி இல்லை என்று தான் பட்டினி கிடந்து நமக்கு உணவளிப்பார். இப்போதும் அம்மாவுக்கு இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும்போது அம்மா கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டியா பிள்ளை என்பதே. பல இரவுகளில் நான் திடீரென விழித்திருந்தால் என்னடா வயுத்துக்கை குத்துதா தலை இடியா என்று இஞ்சித்தேனீர் உடன் என் முன்னே வரும். அதை குடித்து முடிக்கும் வரை தலைதடவி அருகில் இருப்பாள். நானும் இதையே சாட்டாக வைத்து அடுத்தநாளும் வயுத்துக்கை நோகுது என்று ரமணிசந்திரன் கதை புத்தகத்துடன் படுத்திருந்தது வேற கதை.
அப்பா இருந்த போது தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாக எண்ணி உள்வீட்டு நிலைமை புரியாமல் அம்மாவை அது செய்யலை இது செய்யலை என்று உறவுகள் குறை பேசும்போது உண்மையை மறைத்து அவ்வேளையிலும் அச்சொந்தங்களை நேசித்ததைக் கண்டு நான் வியந்ததுண்டு. அம்மா பாவம் இவரின் பாசத்திக்கு தகுதி அற்றவர்கள் பணத்தை உதவியை எதிர் பார்த்தவர்களிடம் அன்பு எப்படிக்கிடைக்கும் அம்மா பாவம்தான்.
அம்மாவிடம் நான் இனி இலங்கை போகும் போது அம்மாவை எதுவிதத்திலும் புண்படுத்தி கவலையுற செய்திருந்தால் நான் செய்த சேட்டைகள் தவறுகள் எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கனும். அம்மாவின் மடிமீது தலை வைத்து அவர் விரல் தலைதடவ தூங்கணும்.
அம்மாவுக்கு பிங் நிறம் என்றால் விருப்பம் ஒவ்வொரு முறையும் அந்த நிறத்தில் புடவை வாங்குவேன். அவாவின் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய அவா. அவரை அடுத்தமுறை சந்திக்கும் போது என்னை முதல் முதலாய் மடி ஏந்திய போது என்ன நினைத்தீர்கள் அம்மா என்று கேட்கனும். ஆறாவதாயும் பெட்டையா பிறந்திட்டியா என்று நினைத்தீர்களா என்று கேலி பண்ணணும் சிரிக்கனும்.
எனக்கு எமது தமிழ் சமூகத்தில் ஊறிப்போன சம்பிரதாயத்தில் பெரும் கோபம் உண்டு. அம்மாவை என் வாழ்வில் பொட்டும் பூவுமாய் பார்க்க முடியவில்லயே என்று இது எனக்கு ஆறாத கவலைதான். அம்மாவின் ஆழுமைக்காகவே நான் இவா பெரிய சிறிமா என்று சொல்லி இருக்குறேன்.
என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. இப்படி அம்மா பைத்தியமாக இருக்கும் நான் எப்படி பிரிந்து இவ்வளவு தொலை தூரத்தில் இருக்க முடியுதென்று இப்பவரை புரியவில்லை. இதுதான் காலத்தின் கொடுமையா. அம்மாவுடன் வாழும் காலம் சொர்க்கம்தான். அதை இழந்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நாம் இருக்கும் காலம்வரை அவர்களை நம் கையில் ஏந்திப்பார்ப்போம். அப்போதுதான் நம் பிள்ளைகள் எம்மை கையில் ஏந்தாவிட்டாலும் தம் அருகிலாவது வைத்து பார்ப்பார்கள். இப்பவும் காலம் கடந்திடவில்லை உங்கள் அம்மாவுக்கு இன்றே I love you என்று சொல்லுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
.......................................................................ஜெயராணி
அப்பா இல்லாததை நான் இன்றுவரை அறிந்ததில்லை. அதை அம்மாவின் அன்பே சரிசெய்தது. அம்மாவின் அன்பு ஆறு பேருக்கும் திகட்டாமல் கிடைத்த போதும், அவரின் கோபம் கண்டிப்பு கருணை என்றும் குறையவே இல்லை. எத்தனை பிடிவாதம், வாக்குவாதம், சண்டை நாம் செய்தாலும் அன்பாலே அதை சரி செய்திடுவார். அதற்கும் நாம் அடங்காத வேளையில். சுள்ளித்தடியால் அடித்து பின் அதற்கு எண்ணை பூசி கவலைப்படும் பரிவு. அதற்கும் போணை என்றும், தொடவேண்டாம் என்னை அடித்துவிட்டாய் தானே? என்று சொண்டு பிதுக்கி விம்மி அழும்போதும். தலை தடவும் அம்மாவிடம் அகப்பட்டு அடிவாங்கி தோற்றுப்போவதில் எவ்வளவு மகிழ்ச்சி. ஆறு பெண்பிள்ளை பெற்றாலும்
கடைசி என்னில்தான் பிரியம் அதிகம். அதை சொல்வதில் எனக்கு பெருமிதம்.
அம்மா எனக்குத்தான் என்று சொல்வதில் எனக்குப் பெருமிதம். அதற்கு அவர் நீங்கள் கலியாணம் செய்தால் எங்களை மறந்திடுவியள் என்றபோது, நான் அம்மாவைத்தான் கலியாணம் செய்வேன். உன்னை விட்டு போக மாட்டேன் என்று அறியாத வயதில் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு சொன்னதில் அம்மாவுக்கு என்ன பெருமையோ அள்ளி அனைத்துக்கொண்டாள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இறைவன் அவதாரம் அம்மாதான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதும்கூட என் உடுப்பு தோய்த்தது கூட இல்லை அவாவே எல்லாம் செய்வார். அந்த வயதில் கூட அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்குவேன். இறுக்கி கட்டி பிடிக்காதே பிள்ளை என்று சொல்வாரே தவிர தள்ளிப்படு என்று எப்பவுமே சொன்னதில்லை. அம்மாவின் பாசமான வாசனை அது ஒரு தனி சுகம் சொல்லும். கோவிலுக்கு கைபிடித்து கூட்டிப்போகும்போது அன்புடன் பல விசயங்கள் சொன்னபடி கூட்டிப்போவார்.
அம்மாவின் கைப்பக்குவம் என்னவொரு ருசி ஆனால் பலதடவை தனக்கு பசி இல்லை என்று தான் பட்டினி கிடந்து நமக்கு உணவளிப்பார். இப்போதும் அம்மாவுக்கு இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும்போது அம்மா கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டியா பிள்ளை என்பதே. பல இரவுகளில் நான் திடீரென விழித்திருந்தால் என்னடா வயுத்துக்கை குத்துதா தலை இடியா என்று இஞ்சித்தேனீர் உடன் என் முன்னே வரும். அதை குடித்து முடிக்கும் வரை தலைதடவி அருகில் இருப்பாள். நானும் இதையே சாட்டாக வைத்து அடுத்தநாளும் வயுத்துக்கை நோகுது என்று ரமணிசந்திரன் கதை புத்தகத்துடன் படுத்திருந்தது வேற கதை.
அப்பா இருந்த போது தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாக எண்ணி உள்வீட்டு நிலைமை புரியாமல் அம்மாவை அது செய்யலை இது செய்யலை என்று உறவுகள் குறை பேசும்போது உண்மையை மறைத்து அவ்வேளையிலும் அச்சொந்தங்களை நேசித்ததைக் கண்டு நான் வியந்ததுண்டு. அம்மா பாவம் இவரின் பாசத்திக்கு தகுதி அற்றவர்கள் பணத்தை உதவியை எதிர் பார்த்தவர்களிடம் அன்பு எப்படிக்கிடைக்கும் அம்மா பாவம்தான்.
அம்மாவிடம் நான் இனி இலங்கை போகும் போது அம்மாவை எதுவிதத்திலும் புண்படுத்தி கவலையுற செய்திருந்தால் நான் செய்த சேட்டைகள் தவறுகள் எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கனும். அம்மாவின் மடிமீது தலை வைத்து அவர் விரல் தலைதடவ தூங்கணும்.
அம்மாவுக்கு பிங் நிறம் என்றால் விருப்பம் ஒவ்வொரு முறையும் அந்த நிறத்தில் புடவை வாங்குவேன். அவாவின் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய அவா. அவரை அடுத்தமுறை சந்திக்கும் போது என்னை முதல் முதலாய் மடி ஏந்திய போது என்ன நினைத்தீர்கள் அம்மா என்று கேட்கனும். ஆறாவதாயும் பெட்டையா பிறந்திட்டியா என்று நினைத்தீர்களா என்று கேலி பண்ணணும் சிரிக்கனும்.
எனக்கு எமது தமிழ் சமூகத்தில் ஊறிப்போன சம்பிரதாயத்தில் பெரும் கோபம் உண்டு. அம்மாவை என் வாழ்வில் பொட்டும் பூவுமாய் பார்க்க முடியவில்லயே என்று இது எனக்கு ஆறாத கவலைதான். அம்மாவின் ஆழுமைக்காகவே நான் இவா பெரிய சிறிமா என்று சொல்லி இருக்குறேன்.
என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. இப்படி அம்மா பைத்தியமாக இருக்கும் நான் எப்படி பிரிந்து இவ்வளவு தொலை தூரத்தில் இருக்க முடியுதென்று இப்பவரை புரியவில்லை. இதுதான் காலத்தின் கொடுமையா. அம்மாவுடன் வாழும் காலம் சொர்க்கம்தான். அதை இழந்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நாம் இருக்கும் காலம்வரை அவர்களை நம் கையில் ஏந்திப்பார்ப்போம். அப்போதுதான் நம் பிள்ளைகள் எம்மை கையில் ஏந்தாவிட்டாலும் தம் அருகிலாவது வைத்து பார்ப்பார்கள். இப்பவும் காலம் கடந்திடவில்லை உங்கள் அம்மாவுக்கு இன்றே I love you என்று சொல்லுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
.......................................................................ஜெயராணி
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.