நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

தெருவெங்கும் தொங்கும் தோரணங்கள் - வி. அல்விற் (ஊறணி)

5/3/2017

0 Comments

 
Picture
பொங்குது மகிழ்வில் மனம் பொங்குது திருவிழாக் காண மனம் பொங்குது தங்குது நினைவுகளுள்ளே தங்குது திரும்புது ஊர் நோக்கி விரும்புது.


Read More
0 Comments

ஊரும் உணர்வும் 3 "ஊறணி அல்விற்" (புலமும் பலமும்)

24/1/2016

0 Comments

 
Photo
புலமும் பலமும்.

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும். இந்த வருட நத்தார் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்துக் கொண்டு பணத்தையும் அனுப்பி விட்டு, ஓடோடி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைக்க, அவர்கள் யாழ்ப்பாண நேரப்படி அரைச்சாம நித்திரையிலிருந்து எழுந்து ‘ஹலோ!’ என்று தூங்கி வழிய, பணம் அனுப்பியிருக்கும் விடயத்தை மட்டும் சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் வேலையை முடித்து கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து பணம் கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொண்டால், வழமையான விசாரிப்புக்களின் பின்னர்,


Read More
0 Comments

ஊரும் உணர்வும் 2 "ஊறணி அல்விற்"

23/5/2015

0 Comments

 
Picture
எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு இருந்தது. வலது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில எங்கட ஊருக்குச் சொந்தமான(?) சேமக்காலை ( எங்கட ஊரில 'சவக்காலை' எண்டு சொல்லுவினம்) இருந்தது. அதக் கடந்துதான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும். நடந்து போகேக்குள்ள நெஞ்சு "பக்குப்பக்கு" எண்டு அடிக்கும். 


Read More
0 Comments

ஊரும் உணர்வும். "ஊறணி அல்விற்"

17/2/2015

0 Comments

 
Picture
எங்கட அப்பா அந்தக் காலத்தில் சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். 
அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க வேணுமெல்லோ? இல்லாட்டில் என்னத்தையோ பேய் பாத்த மாதிரி இருக்கும். 


Read More
0 Comments

தேடலின் ஓசை "ஊறணி அல்விற்"

25/8/2014

0 Comments

 
Picture
எனது கண்களைக் கட்டி விட்டுக் 
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் 
பெரும் பூச்சியான நீ.

என் வாய்களை மூடி வைத்து 
உண்ண மட்டுமே அனுமதித்து 
புத்தகங்களுள் மூழ்கி 
தத்துவம் பேசுகிறாய் நீ.


Read More
0 Comments

"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?"

8/3/2014

0 Comments

 
Photo
தாயாய்த் தாரமாய் 
மாமியாய் மருமகளாய் 
மைத்துனியாய் சித்தியாய் 
அத்தனை பாத்திரங்களையும் உள்ளே 
சொல்லிக் கொடுக்காமலேயே 
கச்சிதமாய் செய்து முடிக்கிறோம்
ஆனால் வெளியே மட்டும் இன்னும் 
பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன 
உடல் பலவீனத்தின் இயலாமையில்
உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும் 
சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன 
உலக இயக்கத்தின் முதற் காரணிகள் 
மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள் 
உணர்வுகளை மதியுங்கள் 
சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் 
வேறுபாட்டைக் களைந்து விடுங்கள் 
பழிவாங்கலைத் தவிர்த்து விடுங்கள் 
உங்களைப் போலவே அவர்களையும் 
ஏற்றுக் கொள்ளுவீர்களாயின் 
இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு 
வாழ்த்துச் சொல்ல?

வி.அல்விற்.
07.03.2014.


Read More
0 Comments

"நிர்க்கதி"

26/1/2014

0 Comments

 
Photo
கருவேந்த உனை நாம் தவமிருந்தோம் 
கருவறையில் கவனமாய் சுமந்திருந்தோம் 
கதைகள் பல உள்ளேயே சொல்லி வந்தோம் 
கனவுகளை உன்னோடு சேர்த்தே சுமந்தோம் 
கதறி உயிர் வலித் துடிப்பில் பெற்றெடுத்தோம் 
கையேந்திய பொழுதில் எமை மறந்தோம் 
கண்ணசைவில் உலக அசைவழித்தோம் 
கையசைவில் புவியாளும் உவகை கொண்டோம் 
கைபிடித் தெழுத நீ பெருமை கொண்டோம் 
களங்கமின்றிப் பேச நீ பெருமை கொண்டோம் 
கண் விழித்து நோயிலே அருகிருந்தோம் 
மீண்டுமுனை மடியிலே தாலாட்டினோம் 


Read More
0 Comments

வணங்குகிறோம் - அல்விற் வின்சன்

27/11/2013

0 Comments

 
கடலாகி கரு முகிலாகி 
இடியாகி கடும் மின்னலோடு 
மழையாகி நிலம் வடிந்தோடும் 
பொருளாகி தமை ஈந்து 
கொடையாகி அறம் நின்று 
தடை நீக்கி குலம் வாழ 
உமை ஆண்ட கோலுக்கு 
அவதார வழிக் கொண்ட 
முத்தமிழ் பெற்றெடுத்த
முடி கொண்ட வீரர்களே 
​

Read More
0 Comments
    Photo

    என்னைப்பற்றி

    அல்விற் வின்செண்ட்
    ஊறணி

    பதிவுகள்

    March 2017
    January 2016
    May 2015
    February 2015
    August 2014
    March 2014
    January 2014
    November 2013

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com