நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை விட.....

8/2/2015

0 Comments

 
Picture
இருபத்தைந்து ஆண்டுகள் 
கடந்து விட்டது என்பதை விட
எம் இனிய காலங்கள்
இறந்து போய் விட்டது 
என்று தான் சொல்ல வேண்டும்.

அழகிய கிராமம் என்பதா
அனைத்து ஆரோக்கியங்களையும் 
அள்ளி தந்த தாய் என்பதா
தெரியவில்லை.

ஆலயங்களின் மணியோசை
அழகிய கடலின் அலையோசை 
அருள் தரும் விநாயகர்
அமைதியே வடிவான அன்னை மாதா 
எம்மைச் செதுக்கிய இரண்டு 
மாபெரும் கல்விக் கூடங்கள்
விளையாட்டு மைதானங்கள்
விசாலமான விமான நிலையம்

எம்மக்களுக்கு போதுமான
இரு பெரும் தொழில் வளங்கள்

மாசில்லா மாதா கோவில் தரை
தாலாட்டும் தென்றல்
ஊர்த் தாகத்தையே தீர்க்கும்
தண்ணீர்க் கிணறு.
இன்னும் எத்தனையோ

கவலை அற்று காற்றாய்
திரிந்தோம் அன்று 
இன்று எத்தனை உயிர்கள்
எம்மோடு இல்லை.

நம் உறவுகளில் பலர்
எங்குள்ளார்கள் என்றே
அறியாமல் நாலா திசைகளிலும்
நாடு கடந்தும் ஒரு நரக வாழ்கை

எல்லாம் இருந்தாலும்
எதுவுமே இல்லாதது போல 
இந்த ஊர் தாகம் தணியுமா

இறுதியாக ஒரு கேள்வி 
நம்மை புதைப்பதற்கோ 
எரிப்பதற்கோவாவது 
எமது மண் கிடைக்குமா? ஏக்கங்கள் மட்டும் மீதமாக

இறைமை மேல் கை 
வைத்தவனோ வசதியாக
எம் தேச மக்களோ 
அகதியாக.........

நிரூபா
*********

Photo
Photo
Photo
Photo
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப்பற்றி

    நிரூபா சபாரத்தினம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    February 2015

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com