நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்

29/1/2023

0 Comments

 
Picture
தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.

கோயில்வளவு மற்றும் எமது பாடசாலைச் சுற்றுவட்டார நிலம், இராணுவத்தின் ஆளுகையிலிருந்து மீண்டும் ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில், கோயில்வளவு சுற்றுவட்டாரம், என்ன வழிகளில் தன்னுடை ய பங்களிப்பை எமது ஊருக்கு வழங்கியது என்ற எனது புரிதலில் இருந்து, ஒரு வேண்டுகோளை இங்கே பதிவிடுகிறே ன்.

அதற்குமுன், எம்மூர் மண்ணின் விடுவிப்பிற்காகத் தன்னலமின்றி உழைத்த அத்துணை நல் ஆன்மாக்களையும் வணங்குகிறே ன்.

கோயில்வளவின் மை யமாக இருந்த மாதாகோயில் ஒரு கிறிஸ்துவ தேவாலயமாக இருந்தபோதும், ஊர் மக்களிடமிருந்து, சமயங்களைத் தாண்டிய பங்களிப்பு அக்கோயிலின் நடவடிக்கைகளுக்கு இருந்ததென்பது, அப்போதிருந்த யாவரும் அறிந்ததே.

இதை விட முக்கியமாக, அருகிருந்த 'றோமன்' கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கோயில்வளவு மூலமாக,
பெரும்பாலான ஊர்மக்கள், வேறுபாடுகளின்றி பயன் பெற்றிருக்கிறோம். அதில் நானும் ஒருவன். முக்கியமாக எனது வீட்டைத்தாண்டிய, சமூக ஒன்றுகூடலுக்கான முதலாவது தளமாக அது இருந்தது. கோயில்வளவிற்கான காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டால், எம்மூரின் எதிர்கால நலன் கருதி, ஒரு சமூகநலக்கூடம், பொருத்தமான ஒரு பகுதியில், நீண்டகால நோக்குடன் கட்டப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை, சம்பந்தப்பட்ட அமைப்பினரிடம் மிகவும் தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.

மேற்படி 'சமூகநலக்கூடம்' முக்கியமாக கலை, விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான பகுதிகளை உள்ளடக்கியதாகவும் கோயிலிற்கான நியாயமான, நிரந்தரமான வருமானத்தை ஈட்டுவதாகவும் திட்டமிடப்படுதல் நன்மை பயக்குமெனவும் நம்புகிறே ன்.

அத்துடன் புலம்பெயர் தேசங்களிலுள்ள எமது சந்தததியினர், எம்மூரிலுள்ள சந்ததியினருடன் உறவைப்பேணி, ஊரின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பதற்கும் மேற்படி சமூகநலக்கூடத்தின் மூலம் நடைபெறும் நிகழ்வுகள் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அமை யும் என்பதும் உறுதியானதாகும்.

தீமையிலும் ஒரு நன்மை என்றெண்ணி, தரை மட்டமாக்கப்பட்ட எமது நிலத்தை, எம்மூரின் எதிர்கால நலனிற்காகத் திட்டமிட்டு மீளுருவாக்குவதற்கான அடிக்கல்லை நாட்டுவது இப்போது செயற்படப்போகும் எமது கைகளிலேயே உள்ளது.

நன்றி
பொன்னையா மலரவன்.
​

இந்தப் பக்கம் hit counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    பொன்னையா மலரவன்

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com