நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

உதவியின் உறைவிடம் மயிலிட்டி மைந்தன் திரு.சிங்கவாகனம் இராசசுந்தரம் அவர்கள்.

10/3/2019

0 Comments

 
Picture
என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் பல கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும் என என் மனதுக்குள் குடிகொண்டிருந்த பல நாள் ஆசை இன்று நிறைவேறியிருந்தது.

​அவர்தான் திரு.சிங்கவாகனம் இராஜசுந்தரம் ஐயா அவர்கள். (உள்ளுணர்ந்து தன்னலமற்று விரைந்து செய்தலே உதவி எனப்படும்) இவ் உதவி எனும் சொல்லுக்கு வரைவிலக்கணம் தான் திரு.சிங்கவாகனம்.

​நான் வன்னி புதுக்குடியிருப்பில் இருக்கும்போது (2000 ம் ஆண்டளவில்) சிறிய வயதிலிருந்தே என் காதுகளுக்குள் எமது உறவுகள் முனகும் பெயர்தான் திரு.சிங்கவாகனம்.

மயிலிட்டி உறவுகள் மட்டும் என வரையறை செய்யாது வன்னி மக்களுக்கு அளப்பெரிய உதவிகளை நீண்டகாலமாக செய்து வருபவர்.

முதியோர் இல்லங்களுக்கு கட்டில்கள், உணவுப்பொதிகள், தள்ளுவண்டிகள், முதியவர்களுக்கு. தனித்தனியாக வாழ்க்கை பண உதவிகள்,சிறுவர் இல்லங்களுக்கு பண உதவிகள், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கல், சிறார்களுக்கான கல்வி உபகரணங்கள் , விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் , வன்னியில் வாழும் ஏழை குடும்பங்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு பண உதவிகள், கால்நடை வளர்ப்பு உதவிகள், தையல் இயந்திரங்கள் வழங்கல், ஜீவனோபாய உதவிகள், வீடுகள் கட்டடங்கள் அமைப்புக்கான உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கான சகல விதமான உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் ஆலயத்துக்கான உதவிகள் என அவர் மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளை முழுமையாக பட்டியலிட முடியாது.

நான் நினைத்தேன் இவ்வளவு உதவிகளையும் செய்கிறாரே இவர் பலகோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரனாயிருப்பார் அதனால் தான் இவர் இவ்வளவு நினைத்துப்பார்க்க முடியாத உதவிகளைச் செய்து வருகிறார் என்று. ஆனால் அவருடன் நீண்டநேர உரையாடலை முடிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன் அவரின் மனது மட்டும் தான் பலகோடி பேருக்கு சொந்தம் ஆனால் அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரன் இல்லை என்று.
அவர் வெளிநாட்டுக்காரன்தான் என்று அவரைப்பார்க்கும் போது தெரியவில்லை கையில் கழுத்தில் நகைகள் இல்லை, சாதாரண உடை, Ac வீட்டில் தங்கவில்லை, cool minaral water ஏதும் கையில் இல்லை . துவிச்சக்கர வண்டியில் பயணம் என எளிமையின் வடிவமாக காணப்பட்டார்.

உதவியின் உறைவிடமாம் சிங்கவாகனம் ஐயாவிடம் என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரால் அளிக்கப்பட்ட விடைகளும்.

​
  • கேள்வி: நீங்கள் எப்போது வெளிநாடு சென்றீர்கள்?
  • விடை: 1989 ல். 34 வயதில்.
 
  • கே:உங்கள் வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் தொழில்கள் பற்றி ?
  • வி:எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். எனது வயது தற்போது 63.நான் கடை ஒன்றிலே cook ஆக வேலை செய்கின்றேன். (எனது கையில் உள்ள காயங்கள் கொதி எண்ணை பட்டு என கையை காட்டினார்.)
 
  • கே: உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு எழுந்தது?
  • வி:இரத்தத்திலேயே ஊறியிருந்தது.
 
  • கே:உங்கள் சொத்து மதிப்பு இலங்கை மற்றும் லண்டனில்?
  • வி:எனக்கென்று இலங்கையிலும் லண்டனிலும் வீடோ காணியோ எதுவுமில்லை. லண்டனில் நான் வாடகை வீடுகளிலேயே அதிக காலம் இருந்தேன். தற்போதும் அரசாங்கம் தந்துள்ள (வாடகை) வீட்டினிலேயே வசித்து வருகிறேன்.(அவர் இவ்வாறு பதில் கூறியதும் ஒருமுறை நான் அதிர்ந்து போனேன்)
 
  • கே:உங்களுக்கென சொத்து எதுவுமில்லாமல் உதவிகளை செய்து வருகிறீர்களே மனைவி மற்றும் பிள்ளைகள் உடன்படுவார்களா?
  • வி:(சிரித்துக்கொண்டே) மனைவி மற்றும் பிள்ளைகள் தான் என்னை இன்னும் ஊக்கப்படுத்துபவர்கள். தற்போது மகள்மாரும் தங்களால் இயன்ற உதவிகளை எனக்கு அளிக்கிறார்கள்.
 
  • கே:ஏன் நீங்கள் யாழ்ப்பாணத்திலுள்ளோருக்கு உதவி செய்வதை விட வன்னி (முல்லை-கிளிநொச்சி) மக்கள் மாணவர்களுக்கு உதவிகளை செய்வதில் நாட்டம் காட்டுகின்றீர்கள்?
  • வி:அவர்கள் உதவியினால் தான் நாம் அனைவரும் இன்று வெளிநாட்டில் குடியுரிமையுடன் இருக்கின்றோம். அவர்களை மறப்பது நாம் மரணிப்பதற்கு சமன்.(யுத்தம் எனும் குற்றச்சாட்டையும் யுத்தத்தால் இறந்த உறவுகளையும் ஆதாரம் காட்டியே நாம் குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டோம்). ஆதலால் தான் நான் அவர்களை நேசிக்கிறேன்.
 
  • கே:இந்த முறை இலங்கை வந்ததற்கான காரணம்.
  • வி:நானும் உதவும் மனம் கொண்ட சிலரும் சேர்த்த கிட்டத்தட்ட 500 000/- பெறுமதியான உதவித்திட்டங்களை நேரடியாக அவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் தனிப்பட்ட வேலைக்காகவும். அவ் உதவித்திட்டங்கள் அனைத்தையும் முடித்ததன் பின்னரே எனக்கு பிற தனிப்பட்ட வேலைகள்.
​
  • கே: வெளிநாட்டிலிருந்து வந்து துவிச்சக்கர வண்டியில் உங்கள் பயணம் தொடர்பாக??
  • வி:மயிலிட்டியில் கால் நடைப் பயணங்களாக உலாவினோம் தற்போது துவிச்சக்கரவண்டி(சிரிப்பு) முன்னேற்றம் தானே..( நான் Ac car ல் திரியும் செலவு 100பிள்ளைகளின் ஒருவருடத்திறகான கல்வி செலவாகும்)

ஐயா நீங்கள் மாடமாளிகை வீடு கட்டி சிம்மாசனத்தில் இருக்கவில்லை ஆனாலும் ஏழை மக்கள் மற்றும் மாணவர்களின் மனங்களில் சிங்கவாகனம் ஐயா நீங்களே சிம்மாசனமாக இருக்கிறீர்கள். நான் வாழ்நாளில் சந்தித்த முதல் அற்புத மகான் நீங்கள் ஐயா.

"தனக்காக வாழ்பவன் இருக்கும்போதே சாகிறான்..
பிறருக்காக வாழ்பவன் இறந்தபின்னும் வாழ்கிறான்''

நன்றி
மயிலை வசந்.
Picture
இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப் பற்றி

    மயிலை வசந்த்

    பதிவுகள்

    March 2019
    January 2019
    April 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com