
இன்னல்கள் மின்னல் வேகத்தில் போகலாம். ஆனால் எம்மவர்க்கு இன்னல்கள் தான் இலவச விருந்தாளி.இவர் வந்தால் போவதில்லை. இவரை அனுப்பிட பல முயற்சிகள் எடுத்தாலும் அவருக்கு எமது பராமரிப்பு மிகவும் பிடித்துக் கொண்டு விடுவதுபோலும் அதனால் அவர் எம்மை விட்டு அகல மறுத்து விடுகின்றார். இவர் எம்முடன் தத்துப் பிள்ளையானதும் குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை.தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்புடையவரகின்றார். இவர் ஏற்படுத்தி விடும் வலிகளுக்கு நாம் வாழ்க்கைப் பட்டு விடுகின்றோம்..