நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

வெளிச்சுப் போச்சு "தயாநிதி தம்பையா"

4/10/2014

0 Comments

 
Picture
இஞ்சை எல்லாமே வெளிச்சுப் போச்சு. ஒருத்தரையும் காணேல்லை. மனிசர் மட்டுமில்லை.இந்தக் கடலுக்கை துள்ளி விளையாடிய மீன் குஞ்சுகளையும் தான் சொல்லுறன்.முன்னையெல்லாம் பிடிச்ச மீன்களையெல்லம் தேவைக்குப் போக மீதியைக் காய வைத்து கருவாடாக்கி பாதுகாத்தம். ஆசுவாசமாக மீனைப் பிடிக்க கம்பிக் கூடடித்து வலைகளால் சுற்றி வளைச்சு களங்கண்டி என்ற பேரோடை கடலுக்கை இறக்கி மீனைப் பிடிச்சு இந்த எண் சாண் உடம்பை வளர்த்தம். இப்ப இங்கை முழுக்கடலுக்கும் கம்பி வேலி போட்டு தடுப்புக் காவல். இந்த விந்தை உலகத்திலை எந்த மூலையிலும் நடக்காத ஒன்று. இப்படி முனகுவவது சிமியோன் அப்பா தான்.

Picture
சின்னனாய் ஒரு (flash back) மாலை நேரம். சூரியன் ஓய்வெடுக்க போயிருப்பார். இருள் கவ்வி அங்காங்கே நட்சத்திர ஒளிகீற்று மின்னிக் கொண்டிருக்கும். கையிலை கட்டுச் சாதம் தோளிலை வலை இவரோடை இன்னும் நான்கு கூட்டாளிமார். மேரி ஆச்சி கையசைக்க மடி நிறையக் கனவுகளோடை கடலுக்கை காலை நனைச்சபடி சிமியோன் அப்பா கட்டு மரத்திலை ஏறுவார். உள்ளுக்குள் பயக் குமுறல் அதையும் காட்டிக் கொள்ளாமல் மேரி ஆச்சி கை அசைக்க கட்டு மரம் நகரத் தொடங்கும். பல சமயங்களில் மேரி ஆச்சியின் இரவுகள் அந்தக் கடற்கரையோரம் போடப் பட்டிருக்கும் வாடிக் கொட்டிலிலையே கழிஞ்சிருக்கும். அதிகாலை சிமியோன் அப்பாவின் சிரிப்பொலி கேட்கும் வரையிலும் ஆச்சியின் கனவுகளும் நினைவுகளும் கடல் அலையோடு போட்டி போட்டபடி மனதை உலைக்கும்.

கட்டு மரம் கரயேற சிரிச்ச படி சிமியோன் அப்பா கரை இறங்கி கொதிச்ச படி ஆவி பறக்கும் தேத்தண்ணீரை ஆச்சி குடுக்க. ஊதிக் குடிச்ச படி மேரி கோவில் மீனை பிறம்பாய் பிடியும் மற்றதை ஏலத்துக்கு தூக்கிக் குடும் என்ற படி கொட்டில் கடையில் எரிந்து கொண்டு தொங்கும் கயிற்றில் சுறுட்டைப் பற்ற வைச்சுக் கொண்டு காலைப் பத்திரிகையை வாங்கி வாசிச்சு அவலங்களை அறிஞ்சு கொள்வார், மூத்தமகள் பற்றிமா வயது பதினெட்டு வெள்ளை சட்டையிலை தேவ மாதாவைப் பார்த்தது போல ஒரு தெய்வீகக் களை.இளவாலைக் கன்னியாஸ்த்திரியார் பள்ளிக் கூடத்திலை தான் உயர் தரம் படிக்கின்றாள். படிப்பிலை படு சுட்டி. அயல் அட்டைப் பிள்ளைகளுக்கும் இவளால் பேருதவி.படி படி என எல்லாருக்கும் ஊக்கம் குடுப்பாள். இது ஒன்று தான் எங்களை தலை நிமிர வைக்கும் எண்டதில் தீர்க்க மான நம்பிக்கை.
அம்மாவைப் போல அப்பாவுக்கு உதவியாய் வலையையும் பின்னி பறியையும் பொத்தி குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்ட எத்தனிப்பு இல்லை. மேரி ஆச்சியின் கனவு தன்ரை தமயன் யாகப்பின் மூத்தவனுக்கு கட்டிக் குடுத்திட வேணும். சிமியோன் அப்பாவைப் போல நேர்த்தியான கடற்தொழிலாளி என்பது அவாவின் பெரும் கணக்கு. அது மட்டுமில்லை குமர்ப் பிள்ளைகளை இந்தக் காட்டுமிராண்டிக் கூலிப் படைகளுக்காலை காவாந்து பண்ணிக் கரை சேர்க்கிறதும் லேசுப் பட்ட காரியமில்லை எண்டது எல்லாத் தாய் மாரின் ஏக்கமும் தான்….
பற்றிமாவைப் பொறுத்த வரையிலை தான் ஒரு ரீச்சராய் வர வேணும் என்பது தான் ஆரம்பக் கனவு. படிப்பு சோறு மட்டும் போடாது கனபேற்றை அறிவுப் பசியையும் தீர்க்கும் என்கிறதிலை சிமியோன் அப்பாவுக்கும் மாற்றுக் கருத்தில்லைத் தான். இலேசான பிடிப்பும் இதில் அவருக்கும் இருக்கு. ஆனாலும் அடி மனதில் ஓர் பேரிடிப்பு. கண்காண தூரமான அரபு நாட்டுக்குபிள்ளைகளை அனுப்புற பெற்றவையின்ரை பயத்தை விட யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்கு எப்பிடி அனுப்பப் போறன் என்ற கேள்வியில் நியாமும் இல்லாமல் இல்லை..இவளை அங்கை அனுப்பிப் போட்டு மடியிலை நெருப்பைக் கட்டிக் கொண்டெல்லவோ இருக்க வேணும் எண்ட பெரும் பயம்.. பற்றிமாவோடை தன்ரை மனக் கிலேசத்தையும் சொல்லிப் பார்த்திருக்கின்றார்.
என்ன சொல்லி இருப்பார்?எப்பிடிச் சொல்லி இருப்பார்? அவருக்கு இந்தக் கடலை விட்டால் உலகமேது?. எதுக்கெடுத்தாலும் உவமான உவமேயத்துக்கு இந்தக் கடல் தான் முன்னுக்கு வந்திடும். பிள்ளை வடிவாய்க் கேள் மோனை. நாங்கள் கடலுக்கை போட்டு வைச்சிருக்கின்ற களம் கண்டி போலைத் தான் நடு ரவுனுக்கை கம்பஸ். அது இப்ப இலங்கை இராணுவத்துக்கு களங்கண்டி கண்டியோ! எப்பப்ப மீன் தேவைக்கு நாங்கள் அதுக்கை இறங்கிறது போலை இராணுவமும் அடிக்கடி ஆள் தேவைப் படும்போது கம்பசுக்குள்ளை இறங்கிப் பிடிகிறான்.
சுருங்கச் சொன்னால் கடலிலை போட்ட களம் கண்டி இப்ப தரையிலை கம்பசைச் சுற்றி போட்டிருக்குது. ஒட்டி ஓரா விளை பிடிச்ச கணக்காய் விளைஞ்சதுகளைப் பார்த்து பயங்கர வாதம் என்ற தூண்டிலைப் போட்டு வளைச்சுப் பிடிப்பெல்லே நடக்குது. இந்த நிலையிலை உன்னை அங்கை எப்பிடி விட்டிட்டு நாங்கள் இருப்பம் சொல்லு. பேசாமல் கொம்மான்ரை ஆசைப்படி யாகப்பு மாமான்ரை மகன் யேக்கப்பனைக் கட்டிப் போட்டு அவனுக்கு ஒத்தாசையாய் இரு மகள். பத்தோடை பதினொன்றாய் எங்கடை தலை விதி எண்டு நொந்து போட்டு விடுவம் என தள தளத்த குரலில் கடற்கரையில் இருந்து கொட்டிய வார்த்தைகள் உலகுக்கு கேக்குதோ இல்லையோ! புலத்திலை வாழுற எங்களுக்கும் கேக்காமலா போய் விடும்…………..

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    தயாநிதி தம்பையா
    ஈழத்துக் கலைஞர்
    நடிகர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர்

    பதிவுகள்

    October 2014
    August 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com