![Picture](/uploads/7/3/7/4/7374965/published/myliddy-google-04-2017_11.jpg?1492905737)
ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஒரு தலைமுறை கடந்திருக்கிறோம்.
ஐம்பது மைல் ஐநூறு மைல் என ஐம்பதினாயிரம் மைல் தாண்டியும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் களைகட்டுகிறது.
ஐம்பது மைல் ஐநூறு மைல் என ஐம்பதினாயிரம் மைல் தாண்டியும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் களைகட்டுகிறது.
திறவுகோல்கள் எம்மிடமுள்ளது கதவுகளைக் காணவில்லை, கதவுகளுடன் வீடுகளும் வீடுகளுடன் எம் ஊரும் களவாடப்பட்டிருக்கிறது.
தன் இரையை நின்று நிதானமாக மென்று விழுங்கும் மலைப்பாம்பென காலம் எம்மை விழுங்கிக் கொண்டிருப்பினும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் தொடர்கின்றன.
ஊர் சேர்வதற்கான கனவுகளுடன் உலகை விட்டுச் சென்ற ஆன்மாக்களின் குரல்களில் இன்னமும் அந்த ஆதங்கங்கள் நிறைந்திருக்கின்றன.
நறுமணத் தைலங்கள் நாசி அறைந்தாலும் காற்று கவ்வி வரும் கடல் வாசம் தேடும் மனம்.
தேசங்கள் திரிந்தாலும் தேகங்கள் களைத்தாலும் தேன்சிட்டுக்கள் பாடும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் விரைவுபடுகிறது.
தன் இரையை நின்று நிதானமாக மென்று விழுங்கும் மலைப்பாம்பென காலம் எம்மை விழுங்கிக் கொண்டிருப்பினும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் தொடர்கின்றன.
ஊர் சேர்வதற்கான கனவுகளுடன் உலகை விட்டுச் சென்ற ஆன்மாக்களின் குரல்களில் இன்னமும் அந்த ஆதங்கங்கள் நிறைந்திருக்கின்றன.
நறுமணத் தைலங்கள் நாசி அறைந்தாலும் காற்று கவ்வி வரும் கடல் வாசம் தேடும் மனம்.
தேசங்கள் திரிந்தாலும் தேகங்கள் களைத்தாலும் தேன்சிட்டுக்கள் பாடும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் விரைவுபடுகிறது.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.