நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

நான் பிறந்த மண்ணே! - அருண்குமார் குணபாலசிங்கம்

23/8/2012

0 Comments

 
பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!

தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே !

நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே !

தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே !

என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே !

அழகான மயிலை மண்ணே !
வாதனாராணிகளையும் பூவரசுகளையும் கிழுவைகளையும்

இன்னபிற மரங்களையும் எமக்காகச் சுமந்த மண்ணே !

வீரர்களையும் சூரர்களையும் கற்றவர்களையும் வித்தகர்களையும்

பெற்றெடுத்து பெருமை கொண்ட மண்ணே !

அன்பான மயிலை மண்ணே !
​


தேவைக்கேற்ப அனைத்தையும் தன்னகத்தே கொண்ட தாய் மண்ணே !

மற்றவர்கள் உன்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட போதும்

நிதானம் தவறாது முன்னேறிய பெருமைக்குரிய மண்ணே !

போட்டிகளில் முன்பாகவும் பொறாமையில் கடைசியாகவும்

என்றும் மாறாநிலை கொண்ட எங்கள் மயிலை மண்ணே !

 
காவியமாகிய பலரைக் கண்டும் கலங்காத நீ இன்று 

தனியே நின்று எங்களைக் கலங்க வைப்பதேன் என் மண்ணே !

தனிமை உனக்குப் பிடித்துவிட்டதா

அதற்காக எங்களைத் தனிமைப் படுத்தாதே என் மண்ணே !

பிடிவாதம் ஏன் மயிலை மண்ணே !

 
பசுவைப் பிரிந்த கன்றுபோல், தாயைப் பிரிந்த குழந்தைபோல்

உன்னைப் பிரிந்த நாங்கள் உன் மடியில் தவழத் துடிக்கின்றோம் 

எப்போது எங்களை உன் மடியில் தவழவைப்பாய் என் தாய் மண்ணே !

குழந்தைகள் நாம் தவிக்கின்றோம் அழைத்துக்கொள் என் மண்ணே !

பாசமுள்ள மயிலை மண்ணே !


தவறி விழுந்த போதெல்லாம் தளராதே 

தாவிப்பாய் என்று ஏவி விட்ட என் தமிழ் மண்ணே !

உன் மண்ணெடுத்து பூசிக்கொள்ள அசையாயிருக்கிறது

அதைவிட விழுந்து புரண்டு கதறி அழவேண்டும் போலிருக்கின்றது !

ஊரே எனது உயிரே பார் போற்றும் மயிலை மண்ணே !

 
தங்கத்தைவிட மேலான உன் அழகு நிலத்தை

தழுவிப்பார்ப்பது எப்போது என்று தயங்காது

உன் குழந்தைகளுக்குச் சொல்

என்னைப் பெற்றெடுத்த மயிலை மண்ணே !

0 Comments



Leave a Reply.

    Picture

    குணபாலசிங்கம் அருண்குமார் 
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    January 2022
    September 2019
    February 2019
    January 2019
    November 2018
    February 2018
    January 2018
    July 2017
    April 2017
    November 2012
    September 2012
    August 2012

    அனைத்துப் பதிவுகள்

    All
    - அமரர் சி.அப்புத்த்ரை
    - நான் பிறந்த மண்ணே
    - "நினைவுகள் 1" மண் சோறு
    - "நினைவுகள் 2" மடம்
    - ”நினைவுகள் 3” வீடும் நானும்
    - மீண்டும் வாழ வழி செய்வோம்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com