
தொடர் - 05
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
நானும் பாதங் கழுவியெல்லோ முத்துமாரியம்மன்
பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தாள்.
நானும் கொண்டு வந்த பூமலரை முத்துமாரியம்மன்
குபுகுபென நான் சொரிந்தேன்.
எடுத்துவந்த பூமலரை முத்துமாரியம்மன்
ஈஸ்வரர்க்கே நான் சொரிந்தேன்.
நானும் ஆய்ந்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்
அத்தாரிற்கே நான் சொரிந்தேன்.
பறித்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்
பக்குவமாய் நான் சொரிந்தேன்.