நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 11

5/7/2018

0 Comments

 
Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் – 11
சண்முகநாதன் கஜேந்திரன்

கோப்பிலிங்கி மாளிகை – சோமசுந்தரம் வரவு
கோப்பிலிங்கி வசனம்:
​
மகனே சோமசுந்தரம்! நீ இப்பொழுது பாட்டனாரின் பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே.
சோமசுந்தரம் பாடல்:
கட்டமுது கட்டியெல்லோ சோமசுந்தரம் – நானும்
கடுகவழி தான் நடந்தார் தம்பியவர் தானும்.
 
சோமன் உடுத்தெல்லவோ சோமசுந்தரம் நானும் – ஒரு
சொருகு தொங்கல் ஆர்க்க விட்டார் தம்பியவர் தானும்.
 
பாட்டனார் பள்ளிக்கூடம் சோமசுந்தரம் தானும் – இப்போ
படிக்கவெல்லோ போறாரம் தம்பியவர் தானும்.
 
அந்தவனம் கடந்து சோமசுந்தரம் தானும் – ஒரு
அப்பால் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்.
 
ஓங்கி வளர்ந்தவனம் சோமசுந்தரம் தானும் – ஒரு
மூங்கில் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்.
 
சிங்கம் உறஙும் வனம் சோமசுந்தரம் தானும் – ஒரு
சிறு குரங்கு தூங்கும் வனம் தம்பியவர் தானும்.
 
ஆலமரச் சோலை தேடி சோமசுந்தரம் தானும் – அவர்
அரு நிழலில் வந்து நின்றார் தம்பியவர் தானும்.
முத்துமாரியம்மன் வசனம்:
மகனே! எங்கு செல்லுகின்றாய்?
சோமசுந்தரம் வசனம்:
தாயார் வீட்டில் இருந்து பாட்டனாரின் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்கின்றேன் அம்மா.
முத்துமாரியம்மன் வசனம்:
மகனே! கையிலே என்ன வைத்திருக்கின்றாய்?
சோமசுந்தரம் வசனம்:
கட்டமுது தாயே!
முத்துமாரியம்மன் வசனம்:
மகனே எனக்கு நாலு ஐந்து நாள் பசி, எனக்கு கொஞ்சம் தரக்கூடாதா?
சோமசுந்தரம் வசனம்:
அம்மா இருவருக்கும் காணாது தாங்களே சாப்பிடுங்கள்.
முத்துமாரியம்மன் வசனம்:
சரி நல்லது தரையை மெழுகடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அப்படியே மெழுகினேன் அம்மா.
முத்துமாரியம்மன் வசனம்:
அன்னத்தைக் கொட்டடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அப்படியே கொட்டினேன் அம்மா.
முத்துமாரியம்மன் வசனம்:
அன்னத்தைக் காலால் உளக்கடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அம்மா அன்னமல்லவா எங்களை வளர்த்தது.
ஆதலால் காலால் உளக்கமாட்டேன். ​
முத்துமாரியம்மன் வசனம்:
நான் பொறுத்துக்கொண்டேன். உளக்கடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அப்படியே உளக்கினேன்.
முத்துமாரியம்மன் வசனம்:
மூன்று திரணையாய் திரட்டடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அப்படியே திரட்டினேன் அம்மா.
முத்துமாரியம்மன் வசனம்:
ஒன்றை எடுத்து எனது வாயில் போடடா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அம்மா பயமாய் இருக்கின்றது.
முத்துமாரியம்மன் வசனம்:
என்ன மகனே கண்டாய்?
சோமசுந்தரம் வசனம்:
ஆயிரம் பிராமணர்கள் கூடி அக்கினிப் பொறி மூட்டி எரிக்கிறார்கள்.
முத்துமாரியம்மன் வசனம்:
மகனே எனக்குப் பேன் அதிகம். ஒரு பேன் எடு மகனே.
சோமசுந்தரம் வசனம்:
அம்மா பயமாய் இருக்கின்றது.
முத்துமாரியம்மன் வசனம்:
மகனே என்ன கண்டாய்?
சோமசுந்தரம் வசனம்:
தலையெல்லாம் கண்களாய் இருக்கின்றது.
​முத்துமாரியம்மன் வசனம்:
நான் தான்ஆயிரம் கண்ணுள்ள ஆங்காரமாரி. 
நீ உன் ஊரிலே இறந்தவர்களை எழுப்படா மகனே.
சோமசுந்தரம் வசனம்:
எல்லோரையும் எழுப்புவேன் எனது தந்தையை எழுப்பமாட்டேன்.
முத்துமாரியம்மன் வசனம்:
எதற்காக எழுப்பமாட்டாய்?
சோமசுந்தரம் வசனம்:
அவர் என்னாலேதான் இறந்ததென்று எண்ணி என்னை வெட்டிவிடுவார் அம்மா.
முத்துமாரியம்மன் வசனம்:
அப்பொழுது "வழியில் கண்ட மாதாவே" என்று நினை. அந்த நேரம் வந்து உதவுகின்றேன்,
சோமசுந்தரம் பாடல்:
சுடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ
சுறுக்குடனே போறாராம் தம்பியரும் நான் தான்.
 
இடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ
இன்பமுடன் போறாராம் தம்பியரும் நான் தான்.
 
அண்ணன்மாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – வெகு
அன்புடனே போறாராம் தம்பியரும் நான் தான்.
 
தந்தையாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – இப்போ
தானோடிப் போறாராம் தம்பியரும் நான் தான்.
சோமசுந்தரம் வசனம்:
அண்ணன்மாரே எழுந்திருங்கள்! தந்தையே எழுந்திருங்கள்!
வைசூரராசன் வசனம்:
அடே சண்டாளா! உன்னால்தான் நாங்கள் எல்லோரும் இறந்தோம். இதோ உன்னை வெட்டப் போகின்றேன்.
வைசூரராசன் பாடல்:
பத்துப் பேருக்கு இளையதொரு என் மகனே பாலா – நீயும்
பாதகனாய் வந்தாயோடா என்மகனே பாலா.
 
சுருள் வாள் எடுத்தல்லவோ என் மகனே பாலா – உன்னை
சுறுக்குடனே வெட்டுறன் பார் என்மகனே பாலா.
 
அடே தப்பிதங்கள் செய்தாயோடா என் மகனே பாலா – உன்
தலையை வெட்டிப் போடுறன்பார் என்மகனே பாலா.
சோமசுந்தரம் பாடல்:
நானும் தப்பிதங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்
என் தலையை வெட்டிப் போடவேண்டாம் தந்தையரே கேளும்.
வைசூரராசன் பாடல்:
அடே வஞ்சகங்கள் செய்தாயோடா என் மகனே பாலா
உன்னை வாளாலே வெட்டுறன்பார் என் மகனே பாலா.
சோமசுந்தரம் பாடல்:
நானும் வஞ்சகங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்
என்னை வாளாலே வெட்ட வேண்டாம் தந்தையரே கேளும்.
 
தகப்பன் கோபத்தைக் கண்டெல்லவோ சோமசுந்தரம் நானும்
இப்போ வழியில் தாயாரை தான் நினைந்தேன் தம்பியர் தானும்.
 
வழியில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு
வந்துதவி செய்யேனம்மா உத்தமியே தாயே.
 
தெருவில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு
தரிசனமோ தாவேனம்மா உத்தமியே தாயே.
முத்துமாரியம்மன் வசனம்:
அடே ராசனே! உனது கர்வத்தை அடக்கி மக்களையும் கூட்டிச் சென்று, சந்தோசமாக இராச்சியத்தை ஆளுங்கள். நான் சென்று வருகின்றேன்.
சோமசுந்தரம் பாடல்:
தந்தையாரைக் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் - தானும் 
இப்போ தானோடிப் போறாராம் தம்பியவர் தானும்.
 
அண்ணன் மாரைக் கோட்டிக்கொண்டு சோமசுந்தரம் – நானும்
இப்போ அன்புடனே போறாராம் தம்பியவர் தானும்.
 
எல்லோரையும் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் நானும் – இப்போ
இன்பமுடன் போறாராம் சபையோரே கேளும். ​
​
தொடரும்…..
இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    சண் கஜா
    (மயிலைக் கவி)
    மயிலிட்டி

    எனது பக்கத்திற்கு
    வருகை தந்தோர் free counter

    Photo
    பெயர்:
    Anton Gnanapragasam

    கருத்துக்கள்:
    சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி)
    மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள்.
    இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

    பதிவுகள்

    October 2022
    July 2022
    March 2022
    January 2022
    September 2019
    June 2019
    April 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    July 2016
    June 2016
    May 2016
    January 2016
    December 2015
    November 2015
    August 2015
    June 2015
    May 2015
    January 2015
    December 2014
    December 2013
    November 2013
    October 2013
    May 2013
    February 2013
    December 2012
    June 2012

    முழுப் பதிவுகள்

    All
    கலையோடு உறவாடி
    காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர்கள்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com