
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுவிக்கப்படாத பகுதிகள் தொடர்பில் நான் இராணுவத்தினருடன் பேசி கொண்டே இருக்கின்றேன். இயலுமான பகுதிகளை அவர்களும் விடுவித்துக் கொண்டே இருக்கின்றனர். என்ன என்றாலும் என்னிடம் கோரிக்கை விடுங்கள் என்னால் முடிந்ததை மட்டுமே நான் செய்கின்றேன்.
பாதுகாப்பு தரப்பினர் எனக்கு அனுமதி வழங்காமல் நான் உங்களுக்கு மீளக்குடியமர்த்த முடியும் என வாக்குறுதி வழங்கமுடியாது. விடுவிக்காதவற்றை என்னால் அடித்து பறிக்க முடியாது என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
அரச அதபரின் பதிலினால் மனம் பாதிப்படைந்த மக்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடாத்த போவதாக தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றிhttp://www.tamilwin.com