
சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள 11 நலன்புரி நிலையங்களிலுள்ள 160 குடும்பங்கள் கடுமையான பட்டினி நிலைமையை எதிர்நோக்கியுள்ளன. அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை உடன் வழங்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்று கோருகின்றார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.