காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மீள் குடியேற்றக்குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
0 Comments
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புனருத்தாரண நிகழ்வுகள் 04/09/2017 அன்று தொடங்கியது.
அந்நிகழ்வில் ஆலயத்திற்கான சுற்று மதிலும், அம்மன் ஆலயத்திற்குரிய தோப்புப் பிள்ளையார் கோவிலுக்கு திருமஞ்சணக் கிணறு ஒன்றும் புதிதாக அமைப்பதற்கு நிலையம் குறிக்கப்பட்டு திருப் பூசைகள் நடாத்தி திரு.வ.குமாரசாமி ஐயரினால் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்திலுள்ள ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. இன்று காலை பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சு. முரளிதரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|