வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகள் சிறு சிறு பகுதிகளாக கடந்த 2 வருடங்களில் விடுவிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் 460 ஏக்கர் காணிகளை ஒருவாரத்தினுள் விடுவிப்ப தாக அண்மையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களிடம் 3 விதமான படிவங்கள் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கிராம சேவகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
அதாவது முகாம்களில் வாழும் காணிகள் அற்ற மக்களுக்கு 2 பரப்பு காணியும் வீடும் வழங்குவதாக தெரிவித்துள்ள படிவமும், விடுவிக்கப்படவுள்ள காணிகளை இனம் காட்டிய மக்களுக்கு அவர்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் என தெரிவித்துள்ள படிவமும் மற்றும் வலிவடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கென பாதுகாப்பு படையின் பயன்பாட்டிற்கு சுவீகரிக்கவுள்ள காணிகளுக்கு இலாபகரமான நட்டஈடு வழங்குதல் என தெரிவித்த படிவமும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்ட நட்டஈடு வழங்குவதாக தெரிவித்த படிவத்தினால் மக்கள் அனைவரும் பெரும் பதற்றத்திலும் ஏமாற்றம் அடைந்த நிலையிலும் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
அதாவது குறித்த படிவத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையா டலில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் இருக்கும் சில நிலங்கள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அவற்றிற்கு போதுமான நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தரவுகள் மற்றும் கள நிலைவரங்களுக்கு அமைய தற்போது படையினரின் பயன்பாட்டிலிருக்கும் தங்களுக்குச் சொந்தமான நிலம் சுவீகரிக்கப்படலாம் என்பதோடு அவ்வாறு சுவீகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு பொருத்தமானதும் இலாபகரமானதுமான நட்டஈடு வழங்கப்படும் என்பதை அறியத்தருவதாக தெரிவித்து யாழ் மாவட்ட அரச அதிபரினால் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிராம சேவகர்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதை அறிந்த அனைத்து மக்களும் தமது சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கோரியதுடன் மக்கள் பாரிய போராட்டத்துக்கு தயாராகவுள் ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
நன்றி: வலம்புரி