
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், மிகப்பெரும் கடல்வளத்தை கொண்ட மயிலிட்டி துறைமுகம் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த துறைமுகம் வேறு வியாபார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நிலையில் மீனவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் 12 கிலோ மீற்றர் கடற்பகுதி மற்றும் 4 பாரிய மீனவ கிராமங்கள் படையினர் வசம் உள்ளது, இந்த நிலையில் நாங்கள் 38 நலன்புரி முகாம்களில் வாழ்கிறோம், எங்களை எங்கள் நிலத்தில் குடியேற்றினால் 38 முகாம்கள் மூடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் மக்கள் சிலரும் மயிலிட்டி துறைமுகத்தை நாளை பார்வையிடவுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாம் அழுத்தம் கொடுப்போம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ்வின்.கொம்