
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டியில் வசிக்கின்ற முன்பள்ளி தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு இலவசமாக மாலைநேர வகுப்புக்கள் 16.08.2019 திகதி அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டமை யாவரும் அறிந்தததொன்று.
மாலைநேர வகுப்புக்கான உதவியை வழங்கிக்கொண்டிருப்பவர்களின் விபரங்கள்.
- அமரர் பொன்னம்பலம் மற்றும் அமரர் பேரின்பம்(ராசா) ஞாபகார்த்தமாக திரு.பொ.இராசகுமார்(சின்னப்பழம்) ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
- மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் - பிரான்சு கிளையை சேர்ந்த இராசரத்தினம் செல்வக்கொடி(மலர்விழி) குடும்பத்தினர் “பிரான்சு கிளையின் எங்கள் கரங்கள் செயற்றிட்டத்தினூடாக” ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
- மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
- அத்துடன் மயிலிட்டி சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான திரு பொ.ரஞ்சனதேவர்(ரஞ்சன்) அவர்கள் இலவசமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு கற்பிக்கின்றார்.
இவ் நல்உள்ளங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பாகவும் மயிலிட்டி மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
தற்போது எமது ஒன்றியத்தால் மொத்தமாக 18000/- மாதாந்தம் சம்பளமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்பள்ளி தொடக்கம் தரம் 2 வரையான ஆசிரியர் கொடுப்பனவு : 4000/-
தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை (புலமைப்பரிசில் வகுப்பு) ஆசிரியர் கொடுப்பனவு: 8000/-
ஆங்கில ஆசிரியரின் கொடுப்பனவு : 6000/-
தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான மேலும் சில முக்கியபாடங்கள் (தமிழ், வரலாறு....போன்றவை) கற்பிக்கப்பட வேண்டியுள்ளதால் அதற்கான நிதிப்பங்களிப்பை எங்கள் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
மாலை நேரவகுப்புக்கள் தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு...
திரு.ச.வசந்தராஜ் - பொருளாளர்: 0094(0)77 2334164
திரு.தி.மோகன் - செயலாளர் : 0094(0)77 448 6172
நன்றி,
பொருளாளர்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.