நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

பிதாமகன் - மயிலை ச.சாந்தன்

13/1/2019

0 Comments

 
Picture

Read More
0 Comments

"கலிகாலத்தில் பணம்"

21/8/2014

0 Comments

 
Picture
இறைவனின் கொடையால் 
அழகானது மனிதகுலம் 
மனிதனின் படைப்பால் 
மனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம் 

மனித உலகில் 
மதங்களோ அன்பை போதிக்க 
மனித மனமோ .......
அச்சடித்த பணத்திற்கு 
அடிமையாக வீதி உலா செல்கின்றது 


Read More
0 Comments

மயிலிட்டியைப் பிரிந்து இன்று 24 வருடங்கள், அதனையொட்டி மயிலை ச.சாந்தனின் படைப்பு!

15/6/2014

0 Comments

 
"ஏங்குகின்றோம் " 

கருவுற்ற மண்ணில்
மூவெட்டாண்டாக நாமில்லை
நீதியின் முன் கண்ணீர்ப்பூக்களாக
தவம் கிடக்கின்றோம்
நீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற
ஈரநெஞ்சு உள்ளம் எவரையும்
மூவெட்டாண்டாக காணவும்மில்லை

Read More
0 Comments

"படைப்பாளி"

23/3/2014

0 Comments

 
Photo
படைப்பாளி

உலகத்திற்கு உவமைகளால் 
உண்மைகளை எடுத்துகாட்டுபவன் 

எண்ணங்களை சிதறவிட்டு 
உவமைகளை காதலித்து 
சிந்தனைகளில் தொட்டில்கட்டி 
கவிதை எனும் குழந்தை பெற்று 
படைப்பாளி எனும் தந்தையாகிறான்


Read More
0 Comments

"பெண் "

8/3/2014

1 Comment

 
Photo
பெண் பெருமைக்குயுரியவள் 
பெருமையோடு போற்றக்கூடியவள் 
தாயாகக்கூடிய வரம் கொண்டவள் 
அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் 

ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே  
அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே  
பரந்த பூமியில் வளர்ந்திடும் 
பணமோகத்தில் ...
போட்டிகளில் .......
பொறாமைகளில் .....
பெண்ணே உன்னையிழந்துவிடாதே

உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே 
உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை 
நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு 
உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் 


Read More
1 Comment

"அம்மாவிற்கு ஓர் கடிதம் "

1/3/2014

0 Comments

 
Photo
  "அம்மாவிற்கு ஓர் கடிதம் "

 அன்புள்ள அம்மா 
நலமா ......?

உன் நினைவுகளின் ஸ்பரிசத்தோடு
 நான் இங்கு நலமே !

உன் மனம் நோகடிப்பதோ 
என் துன்பங்களை கொட்டுவதோ 
நோக்கமல்ல இக்கடிதம் 
என் ஆதங்கத்தை கொட்டுகின்றேன் 



Read More
0 Comments

"பூ"

23/2/2014

0 Comments

 
Photo
" பூ"

மொட்டாகயிருக்கையில் பூமாதேவியில் 
அழகாகயொலிக்கின்றேன் 
பூவாகயிருக்கையில் தேனீக்களுக்கு 
தேனாகயினிக்கின்றேன் 
பூத்துக்குலுங்க்கியதும் தெய்வங்களுக்கு 
அர்ச்சனைப் பூவாகின்றேன் 
எஞ்சிய பூக்களில் பெண்களுக்கு 
கொண்டைபூவாகின்றேன் 
கல்யாணவீடுகளில் மாற்றுமாலையாகின்றேன் 
மரணவீடுகளில் மலர்வளையமாகின்றேன் 
அன்பை பரிமாறுபவர்களுக்கு காதல் தூதுவனாகின்றேன் 
காய்ந்த பின்பு சருகுகளாகின்றேன் 
சருகுகலாகிய பின்பு குப்பை தொட்டிகளில் தூங்குகின்றேன் 
மானிடமே என் வாழ்க்கையை பார் ......
நீயும் ஒரு நாள் குப்பை தொட்டிதான் ?

                நன்றி 
   மயிலை ச .சாந்தன் 


Read More
0 Comments

"அமைதிபூமியில் தலைசாய"

9/2/2014

0 Comments

 
Photo
"அமைதிபூமியில் தலைசாய"

நிலைமாறா
அன்பினையும் ,பாசத்தினையும் 
தந்திட்ட பூஞ்சோலை 
மயிலை மண்ணே 

தத்தி தவழ்ந்த 
குழந்தைகளையும் 
நிலைதடுமாறி 
நடந்திடும் முதியவர்களையும் 
தாலாட்டும் பசுஞ்சோலை 
மயிலை மண்ணே



Read More
0 Comments

"விபச்சாரி"

9/2/2014

0 Comments

 
"விபச்சாரி"

வயிற்றுப்பசிக்காக தன்னையே சிதைத்துக்கொள்பவள்
பூ மன(ண )ம் கொண்ட பாவையவள்
சில்லறைக்காக சிரித்துக்கொள்பவள்
தலைவணங்கும் பெண்குலத்துக்கே
அவமானச்சின்னமாக இருப்பவள்
ஒரு சாண் வயிற்றுக்காக
ஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள்

Read More
0 Comments

"அகதிகளின் உள்ள குமுறல்"

26/1/2014

0 Comments

 
Photo
"அகதிகளின் உள்ள குமுறல்"

சொந்தமாயிருந்த வீடு இழந்து 
சொத்தேயென்று இருந்த கல்வியிழந்து 
சொர்க்கமேயென்று இருந்த மண் இழந்து 
சொந்தமில்லா அன்னிய தேசத்தில் 
சொல்லொணா துயருடன் அகதியெனும் பட்டத்துடன் 

வாரிவாரி அணைத்த சொந்தங்களை பிரிந்து 
வாசமில்லா தேசம்வர பணத்தினை அள்ளியள்ளி கொடுத்து 
வானவில் பார்த்து இரசித்த வானத்தில் 
வானப்பறவை மூலம் பறந்து வானகத்து தேசம் வந்தோம் 


Read More
0 Comments

"வறுமையின் சாடல்"

19/1/2014

0 Comments

 
Photo
 "வறுமையின் சாடல்"


அன்பே உருவான இறைவனே 
அகிலமும் ஆளும் இறைவனே 
கல்லாலான இறைவனே 
கருணையே உன்னிடம் இல்லை(யா)
உருவமே இல்லா இறைவனே 
உருக்கமே உன்னிடம் இல்லை(யா)

மானிடர்யிடத்தில் ஏன் உன் பித்தலாட்டம் 
பொக்கிஷம் ஏன் கொடுத்தாய் பலரிடம் 
வறுமையை ஏன் கொடுத்தாய் எங்களிடம் 


Read More
0 Comments

"சாதனை மலரே"

15/1/2014

0 Comments

 
Photo
   "சாதனை மலரே"
தமிழ் இனம் போற்ற பிறந்தவளே 
மயிலை மண்ணுக்கு பொன்னாடை போர்த்தியவளே 
உந்தன்  சாதனையில் பூரிக்கிது நம்மினம் 
பொக்கிஷம் போல் உன்னை காத்திட ஏங்குது நம்மினம் 

பாராட்டுமழைகள் குவியட்டும் உன்மடியில் 
சாதனை இமயங்கள் தொடரட்டும் உந்தன் அறிவில் 
விண்வெளியில் அக்கினி சுடரும் உன்காலடியில் தலைசாயட்டும் 


Read More
0 Comments

"பொங்கல்"

13/1/2014

0 Comments

 
Photo
ஏர் பூட்டி 
வயல் உழுது 
வரம்பமைத்து 
வாய்க்காலில் நீர்பாய்ச்சி 
நாற்று நட்டு 
களை கழைந்து 
முற்றிய கதிர் நிலம்சாய 
அறுவடை செய்து 
புது நெல்லெடுத்து  
வீட்டு முற்றத்தில் 
மாவிலை தோரணம் கட்டி 
வர்ணஜால கோலம்மிட்டு
புத்தாடை உடுத்தி 
புதுப்பானையில் பொங்கலிட்டு 
பலவகை இனிப்புப் பண்டங்களுடன் 
கரும்பும் சேர்த்து 
கதிரவனுக்கு நன்றிகூற 
படையலிட்டு பார் எங்கும் 
கொண்டாடும் திருநாளாம் 
தமிழர் தைத்திருநாளாம் பொங்கலோ .....பொங்கல் 

                        நன்றி 
            மயிலை ச .சாந்தன் 

0 Comments

சுனாமி நினைவுகளில்ஆண்டு ஒன்பது

21/12/2013

0 Comments

 
Photo
சுனாமி நினைவுகளில் ஆண்டு ஒன்பது

அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை 
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட 
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும் 
ஆறவில்லை எம்மனசு 


Read More
0 Comments

புனித புத்தாண்டே வருக!

15/12/2013

0 Comments

 
Photo
மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு 
புத்துணர்வுதரும் ஆண்டாக வருக!
நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம் 
துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக!
தொலைந்த உறவுகளை  தேடும் உறவுகளுக்கு 
நல்உறவாடும் ஆண்டாகவருக!
வாழ்க்கை தொலைந்த பெண்குலங்களுக்கு 
வசந்தம் வீசும் ஆண்டாகவருக!
ஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும் 
ஆத்மாக்களுக்கு ஆதரவுதரும் ஆண்டாகவருக!


Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - மயிலை ச. சாந்தன்

10/12/2013

0 Comments

 
Photo
 "போராளி "

மானிடமே விரும்பாத சாவு 
மானிடமே விரும்புகின்ற  சரித்திரத்தை 
காவு கொண்டு சென்றதோ 

கறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே 
கலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே 
வெள்ளையனுக்கு அடிபணியாது தலைநிமிர்ந்தவனே 
உன்யின மக்களுக்காக "கறுப்பு சூரியனாக "அவதாரம் எடுத்தவனே 
உன் மரணத்தால் சாவு கூட மரணிக்கின்றதே 


Read More
0 Comments

"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"

26/11/2013

0 Comments

 
"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"

துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு

ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே

உன் மழலைகள்
இடம்பெயந்தோர் ......
அகதிகள் .........
என அடைப்பெயர்கள் கொண்டு
ஊர் ,உலகமெல்லாம் சுற்றுகிறோம்
நீயோ சொந்தமெதுவுமின்றி
நிர்கதியாக நிற்கிறாயே - என் அன்னையே

உனக்கு வாழ்த்து கூறவும் முடியவுமில்லை
இதுதான் முடிவுரை என உரைக்கவும் முடியவில்லை
என்றோ ஒரு நாள் உன்னிடம் வருவோம் அன்னையே
இது வெறும் வார்த்தைகள் அல்ல
என் சுவாச துடிப்புக்களே

நான் இறந்து போகமுன்
உன் அன்பு மடியில் தவள வேண்டும்
உன் இனிய நாதத்தினை கேட்டிட வேண்டும்
என் அன்பு முத்தத்தினை உன்னுடன் பகிர்ந்திடவேண்டும்

இது என் நெஞ்சில் எரிமலையாக வெடித்திடும்
ஓர் அன்பு தேடல்

நன்றி
மயிலை ச .சாந்தன்

0 Comments

"தூரதேசம்"

8/6/2013

0 Comments

 
"தூரதேசம்"

தூரதேச கனவுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல நாம் 
துயரம் போக்க தூக்கம் தொலைத்தவர்கள் நாம் 
அலாரமணிகளில் எழுந்தவர்கள் அல்ல நாம் 
சூரியனின் அரவணைப்பில் விழித்தவர்கள் நாம் 
கல்வியே மூலதனமென கற்றவர்கள் நாம் 
பரதேசியாக நம் உயிர்காக்க கடல் கடந்தவர்கள் நாம் 
இரவல் தேசத்து இருப்பிட அனுமதிபெற 
வரிசையில் ஆடு மாடு போல கிடந்தவர்கள் நாம் 


Read More
0 Comments

"வெடிகுண்டு"

28/4/2013

0 Comments

 
"வெடிகுண்டு"

உன் பெயர் உச்சரிக்கவே அச்சம்

எச்சரிக்கை எச்சரிக்கையே உன் தோற்றம்

புன்னகைகளை பறிக்கும் கொடூரன் நீ 

இரத்தவாசனை முகரும் இரத்தக்காட்டேறி நீ

காதலில் வாழும் மனிதர்களை 

இரக்கமின்றி கொலைசெய்யும் கொலைகாரன் நீ


Read More
0 Comments

"சிந்தனை வரிகள் நமக்கு"

24/3/2013

0 Comments

 
"சிந்தனை வரிகள் நமக்கு"

உழைப்பில் வித்தகர்களாக இருந்திடல் வேண்டும்
எல்லோரையும் சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்திடல் வேண்டும்
வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாய் இருந்திடல் வேண்டும்
இழிவுத்தன்மைகளை ஒழித்திடல் வேண்டும்
கல்லறைகளை பூசித்துவிடல் வேண்டும்
கடமைகளை தவறாமல் செய்திடல் வேண்டும்
கண்ணியமாக காரியங்களை நகர்த்திடல் வேண்டும்


Read More
0 Comments

"ரோஜாமலரே"

13/3/2013

0 Comments

 
"ரோஜாமலரே"

அழகழகாய்  இதழ் இதழாய்
மலர்மலராய்  தினம் தினம் 
காலையில் மலர்ந்திடும் 
ரோஜாமலரே ...........       


Read More
0 Comments

"பணம்"

23/2/2013

0 Comments

 
"பணம்"

ஓடுகின்றோம் ஓடுகின்றோம்

திக்குத் திசையின்றி ஓடுகின்றோம்

நிலையின்றி தடுமாறி தடுமாறி ஓடுகின்றோம்

பணம் எனும் உலகில்

பணம் தேடி ஓடுகின்றோம்


Read More
0 Comments

"ரிசானா"

2/2/2013

0 Comments

 
"ரிசானா"

நீதியில்லா மண்ணில் விழுந்த தேவதையே

உன் மரணத்தின் கொடூரம் என்ன

உன் பசுங்குடில் வருமை போக்க

செல்வந்த நாடு சென்றாயோ?

நீதி செழிப்பற்ற நாட்டில்

உனக்கு நீதியில்லாமல் நடந்த கொடூரம் என்ன


Read More
0 Comments

"புத்தாண்டே வருக 2013"

30/12/2012

0 Comments

 
"புத்தாண்டே வருக 2013"

புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !

முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக !

முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக !


காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக !

கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக !

ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக ! 

மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !


Read More
0 Comments

"சுனாமி"

23/12/2012

0 Comments

 
காலனவனின் கொடூரமா

கயவனவனின் கொண்டாட்டமா

கலியுகத்தின் திண்டாட்டமா 

கைகூப்பும் ஆண்டவனின் கண்ணாமூச்சியாட்டமா 
​

Read More
0 Comments
<<Previous

    மயிலை ச. சாந்தன்

    ச. சதானந்தன் 
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2019
    August 2014
    June 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    November 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    December 2012
    November 2012
    September 2012
    May 2012
    April 2012

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com