மயிலிட்டித்துறை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும்.30/9/2018
மயிலிட்டித்துறை வடக்கு (J/251) கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவுக்குமான அழைப்பு. வருகின்ற 12/10/2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மயிலிட்டித்துறை வடக்கு (J/251) கிராம அலுவலர் பணிமனையில் நடைபெற உள்ளது.
0 Comments
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொ12/8/2018
28 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மீள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் சிறிலங்கா பிரதமர் அலுவலகத்தின் விசேட ஆளணியினர் மயிலிட்டி துறைமுகத்திற்கு நேரில் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்கள்.
காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம். வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறையில் உள்ள தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அழகிய மயிலிட்டிக் கரையில் அழகான விடிகாலைப் பொழுதில் உறவுகளால் மனதுக்கு மகிழ்வைத்தரும் அழகான படங்கள்.
மயிலிட்டித்துறை வடக்கில் வைத்தியசாலை வீதிக்கு அருகில் மயிலிட்டி மக்களுக்கான ஒர் பொது நோக்கு மண்டபம் UNDP நிறுவனத்தினால் அமைத்து அதனை கிராம அபிவிருத்தி அமைப்பிடம் பாரப்படுத்தவுள்ளதுடன்.. அவ் பொது நோக்கு மண்டபத்தின் பகுதியிலேயே கிராமச்செயலகமும் இயங்குவதற்கான ஏற்பாட்டில்.. ஒர் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை (28/06/2018) மு.ப 11-45 க்கு இடம்பெற்ற உள்ளன.
வலி.வடக்கு இடம்பெயர்வின் 28ஆம் ஆண்டு நிறைவையொட்டி துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு.12/6/2018
கௌரவ வடமாகாண முதலமைச்சர் திரு.சி.விக்னேஸ்வரன் அவர்கள் வலி வடக்கில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு இன்று விஜயம் மேற்கொண்டார். மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ கௌரவ பிரதேச சபை தவிசாளர் திரு.சோ. சுகிர்தன் அவர்கள் இப் பிரதேசங்களின் மீள்குடியேற்றம் குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் 1,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலிட்டி-கட்டுவன் வீதிக்கு மேற்குப் புறமாகவுள்ள ஜே-240, ஜே-246 மற்றும் ஜே-247 ஆகிய கிராம சேவைகர் பிரிவுகளுக்குட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி வடக்கில் உள்ள இராணுவ இருப்புக்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றது....16/4/2018
வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுவதுடன், அங்குபொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றது.
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|