வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கும் நிகழ்வு மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதானக் காணியில் இடம்பெற்றது.
0 Comments
எதிர்வரும் 16ஆம் திகதி வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலர், 650 ஏக்கர் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், மீள்குடியேற்ற அமைச்சர் 500 ஏக்கரே விடுவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!!
வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
மயிலிட்டியில் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட 10 வீதிகளும் தேசிய ஒருங்கினைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி அவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல், படங்கள்: க. வீரசிவகரன் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நோர்வே உதவித் தூதர் மற்றும் UNDP பிரதிநிதிகள் வருகை.24/2/2018
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய பகுதியில் கடல் ஆழப்படுத்தல் செயல்பாடுகளை முன்னிட்டு 16/02/2018 இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலக ஏற்பாட்டில் மயிலிட்டி மக்கள் மற்றும் கிராமம் சார்ந்த அமைப்புக்களின் ஒத்துழைப்புப்புடன் விடுவிக்கப்பட்ட பகுதியின் 1.8 km கரையோர பகுதி சுத்தப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் அனர்த்த முகாமத்துவ பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் பிரதே சபை குப்பை அகற்றும் வாகன உதவியுடன் அப் பிரதேசத்தை விட்டு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மயிலிட்டி மக்கள் மயிலிட்டி ஊடான கடற்கரை பாதை திறப்பு 28 வருடங்களின் பின் பொன்னாலை பருத்தித்துறை கடற்கரை வீதி இன்று 06/02/2018 காலை 8.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது எவ்வளவோ போராட்டங்கள், காத்திருப்புக்கள், தவிப்புக்கள், அலைச்சல்கள் என இன்னும்பல துயர்களைக் கடந்து விடுவிக்கப்பட்டது. விடுதலை பெற்றது மயிலிட்டி வீதி என்றுதான் சொல்லவேண்டும்.
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மீள் குடியேற்றக்குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புனருத்தாரண நிகழ்வுகள் 04/09/2017 அன்று தொடங்கியது.
அந்நிகழ்வில் ஆலயத்திற்கான சுற்று மதிலும், அம்மன் ஆலயத்திற்குரிய தோப்புப் பிள்ளையார் கோவிலுக்கு திருமஞ்சணக் கிணறு ஒன்றும் புதிதாக அமைப்பதற்கு நிலையம் குறிக்கப்பட்டு திருப் பூசைகள் நடாத்தி திரு.வ.குமாரசாமி ஐயரினால் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்திலுள்ள ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. இன்று காலை பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சு. முரளிதரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|